ஆஸ்திரேலியாவில் சூரியன் இருக்கும் திசையை நோக்கி சுழலக் கூடிய வீட்டை ஒரு தம்பதி கட்டியுள்ளனர். அதற்கு ரூ.4 கோடி செலவாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தை சேர்ந்த தம்பதி லூக், டெபி. இவர்கள் சொந்த வீடு கட்ட திட்டமிட்டபோது, வீட்டுக்குள் எப்போதும் சூரிய வெளிச்சம் படும்படி கட்ட முடிவு செய்தனர். இதற்காக வீட்டின் நடுப் பகுதியில் அஸ்திவாரம் அமைத்து, சுழலும் வகையில் பிரம்மாண்ட அச்சாணி அமைத்தனர். அதை மோட்டார் மூலம் வீட்டுக்குள் சுவிட்ச் கட்டுப்பாட்டில் இணைத்தனர். வீட்டில் விசாலமான ஜன்னல்கள், கதவுகளுடன் 3 படுக்கையறை, 2 குளியலறை, 1 சமையலறை, அலுவலக அறை, வரவேற்பறை அமைத்தனர்.
ஒட்டுமொத்த வீட்டையும் அச்சாணியுடன் வாஷிங் மெஷின் மோட்டார் அளவில் 2 மோட்டார்கள் மூலம் இணைத்தனர். அதன் கட்டுப்பாட்டை ஹாலில் வைத்துள்ளனர். அதில் வீடு சுழல வேண்டிய நேரத்தை முன்கூட்டி செட் செய்யலாம் அல்லது வேண்டும்போது கைகளால் பட்டனை அழுத்தியும் நகரச் செய்யலாம். சூரியன் உச்சிக்கு நகர்ந்து மேற்கே செல்லச் செல்ல வீடும் சூரிய காந்தி பூவைப் போல மெதுவாக திரும்பிக் கொண்டிருக்கும். அதாவது காலை 6 மணிக்கு கிழக்கில் இருந்த வாசற்படி, மாலை 6 மணிக்கு மேற்காகி இருக்கும். இதன்மூலம், சூரிய ஒளியை வீட்டில் 12 மணி நேரமும் படச் செய்ய முடியும். சோலார் ஒளியில் இயங்கும் கருவிகளை எளிதாக சார்ஜ் செய்து கொள்ள முடியும். வீட்டுக்குள் பகலில் மின்சார விளக்குகள் தேவைப்படாது என்பதால் மின் சிக்கனம் ஏற்படும் என்று லூக், டெபி தம்பதி தெரிவித்தனர். எங்கள் வீடு ஒரு மேஜிக் வீடு. வெயில், மழை, காற்று என காலநிலைக்கேற்ப வீட்டை திருப்பிக் கொள்ளலாம். வரவேற்பறையில் அமர்ந்து காலை முதல் மாலை வரை சூரிய வெளிச்சத்தை ரசிக்க முடியும். வீடு நகரும் உணர்வை பொறுத்துக் கொள்ள தயாராக இருந்தால், இதுபோன்ற அனுபவம் சாத்தியமே என்று லூக் தெரிவித்தார்.
மேலும் தகவலுக்கு இங்கு சுட்டவும்
நன்றி:
தினகரன்
Monday, December 14, 2009
Saturday, December 12, 2009
தமிழ்த்தோட்டம் கருத்துக்களம்
தமிழ்த்தோட்டம் கருத்துக்களம்
தமிழ் நண்பர்களுக்காக தமிழ்த்தோட்டத்தின் சார்பாக தமிழ்த்தோட்டம் கருத்துக்களம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது...
இங்கு உங்கள் கருத்துக்கள் மற்றும் உங்கள் படைப்புகளை சுதந்திரமாக அள்ளி வீசுங்கள்
தமிழ்த்தோட்டம் கருத்துக்களத்திற்கு செல்ல இங்கு சுட்டவும்
தமிழ் நண்பர்களுக்காக தமிழ்த்தோட்டத்தின் சார்பாக தமிழ்த்தோட்டம் கருத்துக்களம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது...
இங்கு உங்கள் கருத்துக்கள் மற்றும் உங்கள் படைப்புகளை சுதந்திரமாக அள்ளி வீசுங்கள்
தமிழ்த்தோட்டம் கருத்துக்களத்திற்கு செல்ல இங்கு சுட்டவும்
Thursday, December 10, 2009
சிறுநீரகக் கற்களுக்கு எளிய வைத்தியம்
சிறுநீரகக் கற்கள் தற்போது இளைஞர், இளைஞிகளுக்கும் கூட தோன்றுகிறது. இதற்கு பல காரணம் இருந்தாலும், இதனை சரிபடுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.
கடுமையான வலி, சிறுநீர் கழிப்பதில் சிக்கல் போன்றவற்றை இது ஏற்படுத்தக் கூடும்.
இதற்கு, சில எளிய வைத்திய முறைகள் உள்ளன. ஆயுர்வேதத்தில் இவை கூறப்பட்டுள்ளன. அதாவது, வாரத்தில் 3 நாட்கள் இடைவெளியில் 2 முறை அதாவது செவ்வாய், வெள்ளி என வைத்துக் கொள்ளலாம். இந்த கிழமைகளில் நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், சிறிது கடுகெண்ணெய் ஆகியவற்றை கலந்து லேசாக(வெதுவெதுப்பாக) சூடாக்கி, அதனை வயிறு, முதுகு, தலை ஆகிய பகுதிகளில் தேய்த்து ஊறவிட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் தலைக்கு குளிக்க வேண்டும்.
அன்றைய தினம் சாப்பிடும் உணவில், சூடான மிளகு ரசம், கருவேப்பிலைத் துவையல், தேங்காய், சீரகம் சேர்த்து அரைத்த பூசணிக்காய் கூட்டு, மோர், கேரட் போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். எப்போதும் வெதுவெதுப்பான நீரைப் பருகுதல் நல்லது.
மேலும், காலை வேளையில் வெறும் வயிற்றுடன் உள்ள போது சிறிது நேரம் ஸ்கிப்பிங் எனப்படும் கயிறுதாண்டும் உடற்பயிற்சி செய்தல் மிகவும் நல்லது.
வீட்டு வேலைகளையும் சுறுசுறுப்புடன் செய்து வருவது உடலுக்கு நல்ல உடற்பயிற்சியாக அமையும்.
இவற்றை செய்து வந்தால் சிறுநீரகக் கற்கள் கரைந்து போகும். சிறுநீரகக் கற்கள் கரைய சிகிச்சை மேற்கொண்டாலும், அதனுடன் மேற்கூறிய பழக்க வழக்கங்களையும் கடைபிடிப்பது நல்லது.
மேலும் தகவலுக்கு இங்கு சுட்டவும்
thanks to webdunia
கடுமையான வலி, சிறுநீர் கழிப்பதில் சிக்கல் போன்றவற்றை இது ஏற்படுத்தக் கூடும்.
இதற்கு, சில எளிய வைத்திய முறைகள் உள்ளன. ஆயுர்வேதத்தில் இவை கூறப்பட்டுள்ளன. அதாவது, வாரத்தில் 3 நாட்கள் இடைவெளியில் 2 முறை அதாவது செவ்வாய், வெள்ளி என வைத்துக் கொள்ளலாம். இந்த கிழமைகளில் நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், சிறிது கடுகெண்ணெய் ஆகியவற்றை கலந்து லேசாக(வெதுவெதுப்பாக) சூடாக்கி, அதனை வயிறு, முதுகு, தலை ஆகிய பகுதிகளில் தேய்த்து ஊறவிட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் தலைக்கு குளிக்க வேண்டும்.
அன்றைய தினம் சாப்பிடும் உணவில், சூடான மிளகு ரசம், கருவேப்பிலைத் துவையல், தேங்காய், சீரகம் சேர்த்து அரைத்த பூசணிக்காய் கூட்டு, மோர், கேரட் போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். எப்போதும் வெதுவெதுப்பான நீரைப் பருகுதல் நல்லது.
மேலும், காலை வேளையில் வெறும் வயிற்றுடன் உள்ள போது சிறிது நேரம் ஸ்கிப்பிங் எனப்படும் கயிறுதாண்டும் உடற்பயிற்சி செய்தல் மிகவும் நல்லது.
வீட்டு வேலைகளையும் சுறுசுறுப்புடன் செய்து வருவது உடலுக்கு நல்ல உடற்பயிற்சியாக அமையும்.
இவற்றை செய்து வந்தால் சிறுநீரகக் கற்கள் கரைந்து போகும். சிறுநீரகக் கற்கள் கரைய சிகிச்சை மேற்கொண்டாலும், அதனுடன் மேற்கூறிய பழக்க வழக்கங்களையும் கடைபிடிப்பது நல்லது.
மேலும் தகவலுக்கு இங்கு சுட்டவும்
thanks to webdunia
Monday, December 07, 2009
மனித உடலைப் பற்றி அறியலாம்
மூளையில் உள்ள நியூரான் கோடிக்கணக்கில் உள்ளன.
ஒரு கிராம் கொழுப்பில் ஒன்பது கலோரிகள் கிடைக்கும்.
மனிதனின் முதுகுத் தண்டு எலும்புகளின் எண்ணிக்கை 33.
நமது உடலில் கணையம்தான் மிகப்பெரிய உறுப்பு.
மனிதனின் இதயம் கார்டிய தசைகளால் உருவாக்கப்பட்டுள்ளது.
மயிரிழை என்பது ஓர் அங்குலத்தில் 48ல் ஒரு பங்காகும்.
மேலும் தகவலுக்கு இங்கு சுட்டவும்
thanks to webdunia
ஒரு கிராம் கொழுப்பில் ஒன்பது கலோரிகள் கிடைக்கும்.
மனிதனின் முதுகுத் தண்டு எலும்புகளின் எண்ணிக்கை 33.
நமது உடலில் கணையம்தான் மிகப்பெரிய உறுப்பு.
மனிதனின் இதயம் கார்டிய தசைகளால் உருவாக்கப்பட்டுள்ளது.
மயிரிழை என்பது ஓர் அங்குலத்தில் 48ல் ஒரு பங்காகும்.
மேலும் தகவலுக்கு இங்கு சுட்டவும்
thanks to webdunia
Wednesday, December 02, 2009
உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில விஷயங்கள்
காய்கறிகளை நன்கு சமைத்து சாப்பிடுவது மிகவும் தவறு. பல காய்கறிகளை பச்சையாகவே சாப்பிடலாம். சிலவற்றை மட்டும்தான் சமைத்து சாப்பிட வேண்டும்.
பச்சை மிளகாயாக இருந்தாலும் சரி, காய்ந்த மிளகாயாக இருந்தாலும் சரி அதிகம் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
அல்சர் உள்ளவர்கள் உணவில் நெய் சேர்த்து சாப்பிடலாம். உருக்கிய நெய்தான் உடலுக்கு நல்லது. கெட்டியான நெய் உடலுக்கு கெடுதல், அது கொழுப்பை ஏற்படுத்தும்.
பசுமாட்டு நெய் உடலுக்கு எந்த கெடுதலும் ஏற்படுத்தாது உடல் எடையையும் கூட்டாது. ஆனால் எருமை பாலில் எடுத்த நெய் அதிக கொழுப்பு நிறைந்தது. உடல் எடை கூட வேண்டும் என்று நினைப்பவர்கள் எருமை நெய்யை சாப்பிடலாம்.
உடலுக்குள் ஏற்படும் அனைத்து வியாதிகளையும் யோகாவால் சரி செய்ய முடியும். ஆனால் விபத்துகளால் ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்ய முடியாது. அதே சமயம் விபத்தினால் பாதிக்கப்பட்ட கைகளை சரியாக இயக்க ஆசனங்கள் பயன்படும்.
மேலும் தகவலுக்கு இங்கு சுட்டவும்
thanks to webdunia
பச்சை மிளகாயாக இருந்தாலும் சரி, காய்ந்த மிளகாயாக இருந்தாலும் சரி அதிகம் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
அல்சர் உள்ளவர்கள் உணவில் நெய் சேர்த்து சாப்பிடலாம். உருக்கிய நெய்தான் உடலுக்கு நல்லது. கெட்டியான நெய் உடலுக்கு கெடுதல், அது கொழுப்பை ஏற்படுத்தும்.
பசுமாட்டு நெய் உடலுக்கு எந்த கெடுதலும் ஏற்படுத்தாது உடல் எடையையும் கூட்டாது. ஆனால் எருமை பாலில் எடுத்த நெய் அதிக கொழுப்பு நிறைந்தது. உடல் எடை கூட வேண்டும் என்று நினைப்பவர்கள் எருமை நெய்யை சாப்பிடலாம்.
உடலுக்குள் ஏற்படும் அனைத்து வியாதிகளையும் யோகாவால் சரி செய்ய முடியும். ஆனால் விபத்துகளால் ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்ய முடியாது. அதே சமயம் விபத்தினால் பாதிக்கப்பட்ட கைகளை சரியாக இயக்க ஆசனங்கள் பயன்படும்.
மேலும் தகவலுக்கு இங்கு சுட்டவும்
thanks to webdunia
Subscribe to:
Posts (Atom)