Friday, October 12, 2007

பார்லி.க்கு தேர்தல் வர துளியும் வாய்ப்பில்லை : லாலு

பாராளுமன்றத்திற்கு இடைத்தேர்தல் வர துளியும் வாய்ப்பில்லை என ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

பாட்னாவில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதனை தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது : இந்தியா - அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இடதுசாரிகள் தெரிவித்துள்ள கவலைகளுக்கு சுமூகமான தீர்வு காணப்பட்டு, இணக்கமான சூழ்நிலை ஏற்படுத்தப்படும்.பாராளுமன்றத்திற்கு இடைத்தேர்தல் வருவது நாட்டின் நலனுக்கு உகந்தது இல்லை.அத்துடன் எந்த ஒரு கட்சியும் தேர்தல் வருவதை விரும்பவில்லை.

இந்தியா - அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம், முற்றிலும் மின் உற்பத்தி சார்ந்தது.இதில் நாம் அமெரிக்காவிடம் சரணடைவதற்கான வாய்ப்பே இல்லை.கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நானே அமெரிக்க சர்வாதிகாரத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளேன்."

புஷ்சை நீக்கு; உலகை காப்பாற்று மற்றும் பிஜேபியை நீக்கு ; நாட்டை காப்பாற்று " என்ற கோஷத்துடன் அந்த போராட்டம் நடத்தப்பட்டது.அப்படி இருக்கையில் அமெரிக்க சர்வாதிகாரத்திற்கு நான் எப்படி ஆதரவளிப்பேன்? நாங்கள் எப்பொழுதுமே ஏழைகளுடனும், வளரும் நாடுகளுடனும்தான் இருக்கிறோம்.அமெரிக்காவுக்கு ஆதரவாக இருப்பது பிஜேபி கட்சிதான்.இவ்வாறு லாலு கூறினார்.

for more visit
http://itpark.50webs.com/ (Tips and Tricks Center)
http://tamilparks.50webs.com/ (Tamil Forum / Tamil Entertainment - Only in tamil publishing your articles freely)
http://kanyakumari.sitesled.com/
http://aboutindia.50webs.com/
http://babyworld.sitesled.com/ (Only parents please seee)

No comments: