இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐசிஎல்) அமைப்பு நடத்தும் டிவென்டி 20 சாம்பியன்ஷிப் போட்டிகள் அடுத்த மாதம் (நவ.) 30-ம் தேதி தொடங்கிறது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் லாரா உள்ளிட்ட முன்னணி ஆட்டக்காரர்களாக திகழ்ந்த ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பலர் பங்கேற்கும் இப்போட்டிகள், டிசம்பர் 16-ம் தேதி வரை சண்டிகரிலுள்ள பன்ச்குலாவில் நடைபெறவுள்ளதாக ஐசிஎல் இன்று அறிவித்தது.
ஒரு மில்லியன் டாலர்களைப் பரிசுத் தொகையாகக் கொண்ட இப்போட்டிகள், தவ தேவி லல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. சென்னையில் நடந்த ஐசிஎல் நிர்வாக வாரியக் கூட்டத்தில், மொத்தம் 20 போட்டிகள் நடைபெறும் தேதிகள் மற்றும் இடங்கள் குறித்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஐசிஎல் தலைவர் கபில் தேவ், "டிவென்டி 20 சாம்பியன்ஷிப் போட்டிகளை சிறப்பாக நடத்துவதற்கு, கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறோம். இதற்கு, நாட்டு மக்கள் உரிய ஆதரவை நிச்சயம் அளிப்பர் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.
எஸ்ஸெல் குழுமத்தின் சுபாஷ் சந்திராவால் துவக்கப்பட்டுள்ள ஐசிஎல் அமைப்புக்குப் போட்டியாக, இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அமைப்பை உருவாக்கி, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் டிவென்டி 20 சாம்பியன்ஷிப் போட்டிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.
friends links are below
http://itpark.50webs.com/ (Tips and Tricks Centre)
http://tamilparks.50webs.com/ (Tamil Entertainment publishing your articles freely)
http://kanyakumari.sitesled.com/ (Tourism)
http://aboutindia.50webs.com/ (India)
http://babyworld.sitesled.com/ (Only for parents)
No comments:
Post a Comment