Wednesday, April 19, 2006

சோம்பேறி காலத்தை மதிப்பதில்லை,

சோம்பேறி காலத்தை மதிப்பதில்லை, காலம் சோம்பேறியை மதிப்பதில்லை.

சொற்கள் வாயிலிருந்து வரக்கூடாது, இதயத்திலிருந்து வரவேண்டும்.

கோபம் அன்பை அழிக்கிறது, செருக்கு அடக்கத்தை அழிக்கிறது.

அன்பில் வணிகத்திற்கு இடமில்லை, வணிகத்தில் அன்பிற்கு இடமில்லை.

அலைகடலில் அல்லி வளராது, அன்பு இல்லாத மனதில் நட்பு மலராது.

நாளைய நன்மைக்காக இன்றைய தேவையை குறைத்துக் கொள்.

காலத்தின் மதிப்பு உனக்கு தெரியுமா? அப்படியானால் வாழ்வின் மதிப்பு உனக்கு தெரியும்.

நண்பனுக்காக உயிரைக் கொடுப்பது என்பது எளிது, ஆனால் உயிரை கொடுப்பதற்குரிய நண்பன் கிடைப்பது அரிது.

வேதனை பொறுத்துக் கொள்பவனே, வெற்றி பெறுவான்.

உடல் நலம் உள்ளவனுக்கு நம்பிக்கை இருக்கும், நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாம் இருக்கும்.

நிதானமாக சிந்திக்க வேண்டும், வேகாமாக செயல்பட வேண்டும்.

தோல்வியை கண்டு அஞ்சுபவரிடம் இருந்து வெற்றி விலகிவிடுகிறது.

அறிவு ஒழுக்கங்கள் வண்டிக்கு இரு சக்கரம் போல

மிகப்பெரிய சாதனைகள் சாதிக்கப்படுவது, உழைப்பினால் அல்ல விடா முற்ச்சியினால்.

நீ வாழ பிறர் வாழ்வை கெடுக்காதே.

பிறருடைய அன்பிற்கு பாத்திரமாவதைவிட, பிறருடைய நம்பிக்கைக்கு பாத்திரமாவதே மேல்.



click here to see more

No comments: