Wednesday, March 29, 2006

வெற்றுத் திண்ணை

Visit Tamil Parks

சத்தியவும் அவளுடைய தந்தையும் பேருந்திற்காகக் காத்திருந்தனர். சத்தியா ஆட்டுக்குட்டியைத் தன் கையில் பிடித்திருந்தாள். தேநீர்க் கடை வெளிச்சம் சத்தியா வைத்திருந்த ஆட்டுக்குட்டியின் மீது விழுந்தது.

ஊருக்கு வரும் முதல் பேருந்தது மெதுவாகத் தேநீர்க் கடை அருகே வந்து நின்றது. ஆட்டுக்குட்டியுடன் பேருந்தில் போகக்ப்போவதை நினைத்து சத்தியவுக்கு ஒரே மகிழ்ச்சி......


பேருந்து 'பாம்.....பாம்........' என்று ஒலி எழுப்பியது.... ஆடு 'ம்மே..........ம்மே..............' என்று கத்தியது........."ஏய் மணி! கத்தாதே..........! நாம் வண்டியில் ஏறிப் போகப் போகிறோம்" என்றாள் சத்தியா.

மூவரும் பேருந்தின் அருகில் சென்றனர்.

"யாராது? ஆட்டுக்குட்டியை வண்டியில் ஏற்றுவது? இறங்கு! இறங்கு!" என்று நடத்துனர் கத்தினார்.................

"ஐயோ, பேருந்தில் கூட்டமில்லையே, ஏற்றக் கூடாதா?" என்றர் சத்தியாவின் தந்தை.........

"சரி சரி ஓட்டுநரை கேட்டுப் பாருங்கள்..............என்றார்

திரும்பி பார்த்த ஓட்டுநர் "ஏற்றிகொள்ளுங்கள்" என்றார்.

மூவரும் பேருந்தில் ஏறினர் பேருந்து விரைந்தது.....................

பேருந்தின் சத்தத்தினாலும் குலுக்கலினாலும் ஆட்டுக்குட்டி மருண்டது............

'ம்மே...........ம்மே................."
ஆட்டுக்குட்டி சத்தியாவின் கையிலிருந்து துள்ளியோட முயன்றது............

அருகில் வந்த நடத்துனர் ஆட்டுக்குட்டியின் தலையை மெதுவாகத் தடவினார்....."எங்கே போக வேண்டும்?"...............

"சந்தைக்கு...." என்றார் சத்தியாவின் தந்தை..........

சத்தியா ஆட்டுக்குட்டியின் தலையை வளைத்து அணைத்துக் கொண்டாள்.......... அது தன் முகத்தை அவளது முகத்தில் உரசியது..........

"ஆட்டை என்னிடம் கொடு" என்றார் அப்பா

"வண்டாம் அப்பா நானே வைத்துக் கொள்கிறேன்" என்றாள் சத்தியா

பேருந்து சந்தையின் அருகில் நின்றது........

"அப்பா, எதற்காக நாம் சந்தைக்குப் போகிறோம்?"

"ஆட்டுக்குட்டியை விற்க"

சத்தியா...........திடுக்கிட்டாள்.................

"வேண்டாம் அப்பா, நான் என் மணியைத் தரமாட்டேன், மணி எனக்கு வேண்டும்: என்றாள் சத்தியா

"திருவிழா வருகிறது. துணிமணி எடுக்க வேண்டும்......செலவுக்குப் பணம் இல்லை........அதனால் ஆட்டுக்குட்டியை விற்கத்தான் வேண்டும்"

விக்க வேண்டாம் அப்பா.....................வீட்டுக்குப் போவோம் அப்பா.........................வாங்க................" (சத்தியாவின் கண்களில் நீர் ததும்பியது........)

பரபரப்பாக ஆட்டு வியாபாரம் நடந்து கொண்டிருந்த இடத்துக்குச் சென்றார்........வியாபாரியிடம் ஆட்டுக்குட்டியை விலை பேசினார் சத்தியாவின் தந்தை...

"நான் தரமாட்டேன்..........தரமாட்டேன்........." கண்ணீருடன் சத்தியா அழத் தொடங்கினாள்..

"உன்னக் கூட்டி வந்தது தொந்தரவாகப் போயிற்றே..." என்றவர் ஆட்டுக்குட்டியை 'வெடுக்' எனப் பிடுங்கி வியாபாரியிடம் கொடுத்தார்... பணத்தைப் பெற்றுக் கொண்டார்.

ஆட்டுக்குட்டி மிரண்டு 'ம்மே..........ம்மே......" என்று கத்தியது.....

திரும்பி திரும்பித் தன் ஆட்டுக்குட்டியைப் பார்த்தவாறே சென்றாள் சத்தியா......

'அங்கே பார்! குடைராட்டினம் சுற்றுகிறது. ஏறிப் பார்க்கிறாயா?'

'பொரி கடலை உனக்குப் பிடிக்குமே, வாங்கித் தரவா?'

பதில் இல்லை.

'உனக்குச் சட்டை வாங்கலாம், வா'

"வேண்டாம் அப்பா, வீட்டிற்குப் போகலாம்"

இருவரும் அமைதியாக வீட்டிற்குத் திரும்பினர். சத்தியா வீட்டிற்குள் போகாமல் திண்ணையிலேயே உட்கார்ந்தாள். ஆட்டுக்குட்டி கட்டியிருந்த தூணில் கயிறு மட்டும் இருந்தது. அந்தக் கயிற்றைப் பார்த்துக் கொண்டிருந்தாள்............

No comments: