Tuesday, October 04, 2016

4669 கான்ஸ்டபிள் பணிவாய்ப்பு அறிவிப்பு



மத்திய அரசுப் பணியிடங்களை ஸ்டாப் செலக்சன் கமிஷன் எனப்படும் எஸ்.எஸ்.சி., அமைப்பு பொது எழுத்துத் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப்பி வருவது நாம் அறிந்ததுதான். புது டில்லி போலீஸ் படையில் எக்ஸிக்யூடிவ் பிரிவிலான கான்ஸ்டபிள் பதவிகளை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பினை எஸ்.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 4669 இடங்கள் நிரப்பப்பட உள்ளது.

காலியிட விபரம்: எக்ஸிக்யூடிவ் பிரிவிலான இருபாலருக்கான தற்காலிக கான்ஸ்டபிள் பணியிடங்கள் 3316ம், மகளிருக்கான எக்ஸிக்யூடிவ் பிரிவிலான கான்ஸ்டபிள் பணியிடங்கள் 815ம் சேர்த்து மொத்தம் 4669 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு அரசு நிபந்தனைகளின்படி ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடும் உள்ளது.

வயதுத் தேவைகள்: 01.07.2016 அடிப்படையில் ஆண் விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 21 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். மகளிர் விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 25 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதிகபட்ச வயதில் எஸ்.சி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை உள்ளது.

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் ப்ளஸ்டூ அளவிலான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: பிஸிக்கல் என்ட்யூரன்ஸ் டெஸ்ட், மெஷர்மென்ட் டெஸ்ட் மற்றும் கம்ப்யூட்டர் வாயிலான எழுத்துத் தேர்வு, டீடய்ல்டு மெடிக்கல் எக்சாம், போலீஸ் வெரிபிகேஷன் என்ற பல நிலைகளிலான தேர்ச்சி முறை பின்பற்றப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/-ஐ பாரத ஸ்டேட் வங்கியிலோ, கிரெடிட் அல்லது டெபிட் கார்டு, நெட்பேங்கிங் வாயிலாகவோ செலுத்த வேண்டும். மகளிர், எஸ்.சி., எஸ்.டி., முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள்: 10.10.2016

இணையதள முகவரி: www.ssconline.nic.in

www.jobsandcareeralert.com



No comments: