Wednesday, May 23, 2007

மோசமான சாலைகளுக்கு ஊழலே காரணம்

சாலைகள் மோசமான நிலையில் காணப்படுவதற்கு ஊழலே காரணம் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

டெல்லியில் ஊரக சாலைகள் குறித்த தேசிய மாநாட்டில் இன்று கலந்து கொண்டு பேசிய அவர், சாலைகள் கட்டுமானப் பணிகளில் ஊழல் நடப்பது புற்றுநோயைப் போன்று பரவி வருவதாகக் கவலை தெரிவித்தார்.

ஊரக சாலைகள் அமைப்பதில் தரத்திற்கு உத்தரவாதம் வேண்டும் என்று வலியுறுத்திய அவர், நாட்டில் சாலைகள் கட்டுமானப் பணிக்காகவும், செப்பனிடுவதற்காகவும் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுவதாகவும், ஆனால் அந்தச் சாலைகளோ ஒவ்வொரு மழைக்காலத்திலும் மோசாமன நிலையை அடைந்துவிடுவதாகவும் கூறினார்.
மேலும், இந்தக் குறைபாடுகள் நீக்கப்பட்டு வெளிப்படையான முறையிலும் சிறந்த முறையிலும் ஊரக மேம்பாட்டுத்துறை செயல்படும் என்று தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

(மூலம் - வெப்துனியா)
for more visit
http://tamilparks.50webs.com http://kanyakumari.sitesled.com
http://aboutindia.50webs.com http://babyworld.sitesled.com

No comments: