Monday, April 02, 2007

இட ஒதுக்கீடு:ஜெ.புகாருக்கு கருணாநிதி பதில்

Publish your articles freely in http://tamilparks.50webs.com No.1 Tamil Webpage

2 ஏப்ரல் 2007
இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், மத்திய அரசு திறமையான வழக்கறிஞர்களை கொண்டு வாதாடவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறிய குற்றச்சாட்டுக்கு, தமிழக முதல்வர் கருணாநிதி விளக்கமளித்துள்ளார்.இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,முந்தைய ஜெயலலிதா அரசு கொண்டுவந்த 69 சதவீத இடஒதுக்கீடு சட்டம் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படாமல் பல இன்னல்களுக்கு உள்ளாக நேர்ந்தது என்றும்,இதற்கு ஜெயலலிதா அரசு நியமித்த வழக்கறிஞர்கள்தான் காரணம் என சொல்ல முடியுமா என கேள்வி எழுப்பி உள்ளார்.இட ஒதுக்கீட்டை ஆதரிப்பதுபோல நடித்துக் கொண்டு,அந்த கொள்கைக்கு மறைமுகமாக குழி தொண்டி கொண்டிருப்பவர்களை எப்போதுதான் இந்த நாடு அடையாளம் கண்டுகொள்ளப்போகிறதோ என்றும் அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு பாதுகாப்பாக 1993 ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டம் பற்றிய விவரத்தை,ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றபோது எடுத்துச் சொல்ல மறந்து விட்ட அதிமுக தலைவிக்கு இடஒதுக்கீடு பற்றியெல்லாம் அறிக்கைவிட எந்தவிதமான அருகதையும் இல்லை.27 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் 'நோஞ்சான் வக்கீல்' ஆஜரானதாக ஜெயலலிதா கூறும் குற்றச்சாட்டு உண்மை இல்லை.அந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம்.அவர் யார் என்றால் ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில்,ஜெயலலிதாவிற்கு எதிராக ஆஜராகி வாதாடியவர்.அந்த காழ்ப்புணர்ச்சியின் காரணமாகத்தான் தனது அறிக்கையில் அந்த வழக்கறிஞரை 'நோஞ்சான் வக்கீல்' என அநாகரீகமாக ஜெயலலிதா கூறியுள்ளதாக அந்த அறிக்கையில் கருணாநிதி மேலும் தெரிவித்துள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
visit http://tamilparks.50webs.com for more

No comments: