Friday, April 21, 2006

முடிவில்லாதது (தேர்தல் கவிதை)

முடிவில்லாதது

சத்துணவோடு முட்டை பொங்கலுக்கு வேட்டி சட்டை
இலவசமாய் மின்சாரம் கடன்களெல்லம் ரத்தாகும்
காவிரியில் தண்ணீர் கணக்கின்றி வேலை வாய்ப்பு
எதுவும் நடக்கவில்லை ஏழ்மையும் மாறவில்லை

செருப்பின்றி நடந்தவர்கள் சொகுசுக் கார் வாங்கிவிட்டார்
ஓட்டுப் போட்டு வளர்த்தவர்கள் ஓட்டாண்டி ஆகிவிட்டோம்
"என்னாச்சு வாக்குறுதி ஏமாற்றப் பார்க்காதே
சொன்னதைச் செய்யாமல் திரும்பவந்து நிற்காதே "

"ஐயையோ அண்ணாச்சி அப்போ நான் வேற கட்சி
இந்த கட்சி ஆட்சியிலே தேனொடும் பாலோடும்"
ஆட்சிகள் மாறியது ஆண்டுகள் ஓடியது
தேனும் பாலுமென்ன தண்ணீரே ஓடவில்லை

ஊழலென்றார் கோடியென்றார் கூட்டம் கூட்டி திட்டுகின்றார்
அத்தனையும் அதே வரிகள் ஐய்ந்து வருட இடைவெளியில்.
கோட்டைக்குப் போனவர்கள் கோட்டை கட்டி வாழுகின்றார்
வாக்கை அளித்தவர்கள் வாழ்வைத் தொலைத்துவிட்டோம்.

பெட்டியில் தொடங்கி இயந்திரம் வரைக்கும்
மாறவில்லை வாக்குறுதி மறுபடியும் தேர்தல்
நம்பிக்கை இழக்கவில்லை நாட்டு நலன் கருதி
மறக்காமல் வோட்டளிப்போம் மறுபடியும் மறுபடியும்

1 comment:

Anonymous said...

A nice kavithani