Friday, September 30, 2011

கதைப் போட்டி

"போட்டி சார்ந்த விளக்கமும் தலைப்பின் நோக்கும்"


ஒரு சமகாலத்தை எதிர்காலத்திற்கு படைப்புகளினூடே தக்கவைத்துக் கொள்வதே இலக்கியம். அது சிறுகதையாகவும் நாவலாகவும் கவிதையாகவும் கட்டுரையாகவும் வேறு புதினங்களாகவும் கூட அமைகின்றன. அவ்வழியில், நம் தளத்திற்கு வரும் உறுப்பினர்களை ஒரு படி மேலெடுத்துச் செல்லும் நோக்கில் அனைவருக்கும் வாய்ப்பளித்து ஊக்கமளித்து நல்ல படைப்பாளிகளை உருவாக்கும் வளர்க்கும் எண்ணம் கொண்டே இப்போட்டிகள் அறிவிக்கப் பட்டுள்ளன. அதன் பொருட்டே இப் போட்டியின் தலைப்பு இலக்கியப் போட்டி என்று வைக்கப் பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஒரு தலைப்புக் கொடுத்து அதற்குள் மட்டும் அடக்குவதைக் காட்டிலும் அவரவர் அறிவுசார்ந்த அனுபவம் சார்ந்த படைப்புகளை ஒவ்வொரு சராசரி மனிதரிடமிருந்தும் வரவேற்று அதனில் சிறந்த படைப்புக்களைத் தேர்ந்தெடுத்து அதற்கு மதிப்பளிக்கத் தக்க வகையில் இப்போட்டி அமையுமெனில் அது புதிதாய் எழுதுவோரையும் ஊக்குவிக்கும் வகையில் அமையும் என்பதே எம் நோக்கம். தவிர போட்டியில் கலந்து கொள்ள பாலினம் குறித்து நிபந்தனையில்லை. ஆண் பெண் பேதமின்றி திறமையுள்ளவர்கள் அதுசார்ந்த போட்டிகளில் யாராயினும் கலந்து கொள்ளலாம். போட்டிகளில் கலந்துக் கொள்ளும் அனைத்து உறுப்பினர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்தும், ஒத்துழைப்பிற்கான நன்றிகளும் உரித்தாகட்டும்!
இது நம்மை நாமே வளர்த்துக் கொள்ளும் முயற்சியன்றி வேறில்லை...
ஒத்துழைப்பு நல்கும் அனைவருக்கும் நன்றி!!!

Monday, September 26, 2011

கவிதைப் போட்டி

"போட்டி சார்ந்த விளக்கமும் தலைப்பின் நோக்கும்"


ஒரு சமகாலத்தை எதிர்காலத்திற்கு படைப்புகளினூடே தக்கவைத்துக் கொள்வதே இலக்கியம். அது சிறுகதையாகவும் நாவலாகவும் கவிதையாகவும் கட்டுரையாகவும் வேறு புதினங்களாகவும் கூட அமைகின்றன. அவ்வழியில், நம் தளத்திற்கு வரும் உறுப்பினர்களை ஒரு படி மேலெடுத்துச் செல்லும் நோக்கில் அனைவருக்கும் வாய்ப்பளித்து ஊக்கமளித்து நல்ல படைப்பாளிகளை உருவாக்கும் வளர்க்கும் எண்ணம் கொண்டே இப்போட்டிகள் அறிவிக்கப் பட்டுள்ளன. அதன் பொருட்டே இப் போட்டியின் தலைப்பு இலக்கியப் போட்டி என்று வைக்கப் பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஒரு தலைப்புக் கொடுத்து அதற்குள் மட்டும் அடக்குவதைக் காட்டிலும் அவரவர் அறிவுசார்ந்த அனுபவம் சார்ந்த படைப்புகளை ஒவ்வொரு சராசரி மனிதரிடமிருந்தும் வரவேற்று அதனில் சிறந்த படைப்புக்களைத் தேர்ந்தெடுத்து அதற்கு மதிப்பளிக்கத் தக்க வகையில் இப்போட்டி அமையுமெனில் அது புதிதாய் எழுதுவோரையும் ஊக்குவிக்கும் வகையில் அமையும் என்பதே எம் நோக்கம். தவிர போட்டியில் கலந்து கொள்ள பாலினம் குறித்து நிபந்தனையில்லை. ஆண் பெண் பேதமின்றி திறமையுள்ளவர்கள் அதுசார்ந்த போட்டிகளில் யாராயினும் கலந்து கொள்ளலாம். போட்டிகளில் கலந்துக் கொள்ளும் அனைத்து உறுப்பினர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்தும், ஒத்துழைப்பிற்கான நன்றிகளும் உரித்தாகட்டும்!
இது நம்மை நாமே வளர்த்துக் கொள்ளும் முயற்சியன்றி வேறில்லை...
ஒத்துழைப்பு நல்கும் அனைவருக்கும் நன்றி!!!

Friday, September 23, 2011

தமிழ்தோட்டத்தில் மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

உறுப்பினர்கள் எல்லோருக்கும் வணக்கமும், போட்டி குறித்த மகிழ்வும்!
இப்போட்டி நம் தமிழ்த்தோட்டத்தில் உள்ள எல்லோருமே கலந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் அல்லாதோரும் போட்டியில் கலந்து கொள்ள விருப்பமெனில் நம் தளத்தில் உறுப்பினராகி பத்து பதிவுகள் முடிந்தபின் கலந்து கொள்ளலாம். போட்டிக்கான கால அளவு அதற்குத் தக்க நீட்டிக்கவும் பட்டுள்ளது. இதர விவரங்கள் கீழுள்ளவாறு:

"போட்டி சார்ந்த விளக்கமும் தலைப்பின் நோக்கும்"


ஒரு சமகாலத்தை எதிர்காலத்திற்கு படைப்புகளினூடே தக்கவைத்துக் கொள்வதே இலக்கியம். அது சிறுகதையாகவும் நாவலாகவும் கவிதையாகவும் கட்டுரையாகவும் வேறு புதினங்களாகவும் கூட அமைகின்றன. அவ்வழியில், நம் தளத்திற்கு வரும் உறுப்பினர்களை ஒரு படி மேலெடுத்துச் செல்லும் நோக்கில் அனைவருக்கும் வாய்ப்பளித்து ஊக்கமளித்து நல்ல படைப்பாளிகளை உருவாக்கும் வளர்க்கும் எண்ணம் கொண்டே இப்போட்டிகள் அறிவிக்கப் பட்டுள்ளன. அதன் பொருட்டே இப் போட்டியின் தலைப்பு இலக்கியப் போட்டி என்று வைக்கப் பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஒரு தலைப்புக் கொடுத்து அதற்குள் மட்டும் அடக்குவதைக் காட்டிலும் அவரவர் அறிவுசார்ந்த அனுபவம் சார்ந்த படைப்புகளை ஒவ்வொரு சராசரி மனிதரிடமிருந்தும் வரவேற்று அதனில் சிறந்த படைப்புக்களைத் தேர்ந்தெடுத்து அதற்கு மதிப்பளிக்கத் தக்க வகையில் இப்போட்டி அமையுமெனில் அது புதிதாய் எழுதுவோரையும் ஊக்குவிக்கும் வகையில் அமையும் என்பதே எம் நோக்கம். தவிர போட்டியில் கலந்து கொள்ள பாலினம் குறித்து நிபந்தனையில்லை. ஆண் பெண் பேதமின்றி திறமையுள்ளவர்கள் அதுசார்ந்த போட்டிகளில் யாராயினும் கலந்து கொள்ளலாம். போட்டிகளில் கலந்துக் கொள்ளும் அனைத்து உறுப்பினர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்தும், ஒத்துழைப்பிற்கான நன்றிகளும் உரித்தாகட்டும்!


போட்டியில் கலந்துக்கொள்ள இன்றே தமிழ்த்தோட்டத்தில் உறுப்பினராகிக் கொள்ளுங்கள் 

Friday, September 09, 2011

ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்

 ஓணம் பண்டிகை கொண்டாடும் அனைவருக்கும் ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்


இந்த பூமியில், தன்னால் எல்லாம் செய்ய முடியும் என, நினைக்கிறான் மனிதன்; ஆனால், இறை சக்தியின் முன், அவனது எண்ணங்கள் தவிடு பொடியாகி விடுகிறது. அப்படியானால், வாழ்வில் வெற்றி பெற என்ன செய்வது என்றால், இறைவனின் திருவடிகளில், ஆழ்ந்த நம்பிக்கையுடன் பணிந்து விடுவதுதான். முழு நம்பிக்கையுடன் இறைவனின் திருவடிகளில் சரணடைந்தவனுக்கு, வெற்றி மேல் வெற்றி தான்.மகாபலி சக்கரவர்த்தி, மலைநாட்டை ஆண்டு வந்தான். அவனைப் போல் நல்லவர் யாருமில்லை. என்ன கேட்டாலும் கொடுப்பான்; வாக்கு தவறாதவன். ஆனால், இந்த நற்குணங்களாலேயே, தனக்கு நிகர் யாருமில்லை என கர்வம் கொண்டான்.

இப்படி ஒரு நல்லவன், சொர்க்கத்தில் வாழ வேண்டும் என பெருமாள் நினைத்தார்; ஆனால், ஆணவம் பிடித்தவர்கள் சொர்க்கத்தில் நுழைய முடியாது. அந்த ஆணவத்தை நீக்குவதும் பெருமாளால் மட்டுமே முடியும். எனவே, குள்ள வடிவில் அந்தணராக வடிவெடுத்து மகாபலியிடம் வந்தார். மூன்றடி நிலம் கேட்டார். “ராஜ்யத்தையே வேண்டுமானாலும் தருகிறேன்…’ என்று அப்போதும் அவன் ஆணவத்துடன் தான் பேசினான்.
பெருமாள், திரிவிக்ரமனாக வடிவெடுத்து, இரண்டடிகளால் உலகை அளந்து, மூன்றாவது அடிக்கு இடம் எங்கே என்றார். அவன் தலையை நீட்டினான்; தலையில் திருவடி பதித்தார். அவனுக்கு, வைகுண்ட பதவி கிடைத்து விட்டது. அதை விட பெரிய பதவி உலகில் வேறு ஏதுமில்லை.
இப்படிப்பட்ட ஒரு நல்லவன், தங்களைக் காண ஆவணி திருவோண நாளில் வர வேண்டுமென மக்கள், பெருமாளிடம் வரம் கேட்டனர்; பெருமாளும் வரமளித்தார். அதனால் தான், தங்கள் மன்னனை வரவேற்க, சகல பதார்த்தங்களுடன் மலைநாட்டு மக்கள் தயாராக இருக்கின்றனர்.
பெருமாளின் திருவடி, மகிமையி<லும் மகிமை மிக்கது. அவர், கோகுலத்தில் கண்ணன் எனும் சிறுவனாக வந்த போது, கோபிகைகளிடம் வெண்ணெய் கேட்டு கெஞ்சுவார். “கண்ணா… நீ நர்த்தனமாடினால் வெண்ணெய் தருவோம்…’ என்பர்; அவனும், சலங்கை குலுங்க நாட்டியமாடுவான். அப்போது, அவனது திருவடிகளை ரசித்துப் பார்த்த கோபிகைகள் எல்லாருமே அவனோடு கலந்தனர்.
பெருமாள் கோவிலுக்குப் போனால், முதலில் அவரது திருவடியைத் தான் தரிசிக்க வேண்டும். அதன் பிறகு, அங்க தரிசனம் செய்து முகத்தைப் பார்க்க வேண்டும். பெருமாளின் திருமந்திரங்களிலும் அவரது திருவடியின் சிறப்பே சொல்லப்பட்டுள்ளது. “ஸ்ரீமந் நாராயண சரணௌ சரணம் பிரபத்யே…’ என்பது ஒரு மந்திரம்.

“சரணௌ’ என்றால், “இரண்டு திருவடிகள்’ – “பிரபத்யே’ என்றால், “சரணடைதல்’ – “நாராயணனின் திருவடிகளில் சரணடைகிறேன்…’ என்பது மந்திரத்தின் பொருள். இவ்வாறு, யார் ஒருவர் ஆத்மார்த்தமாக பெருமாளிடம் சரணடைகிறாரோ, அவருக்கு எந்த துன்பமும் வாழ்க்கையில் இல்லை.
தெய்வங்களுக்கு எத்தனையோ தலைகள், கைகள் என்றெல்லாம் பார்க்கிறோம்; ஆனால், திருவடிகள் மட்டும் இரண்டு தான் இருக்கும். இதில், எந்த தெய்வத்திற்கும் மாறுபாடில்லை. அது மட்டுமல்ல… நமக்கு இரண்டு கை. அந்தக் கைகளால் இரண்டு திருவடிகளையும் பிடித்துக் கொள்வது எளிது. அதனால் தான், மகாபலி சக்கரவர்த்தி பெருமாளின் திருவடியை விரும்பி ஏற்றார்.
பெருமாள் உலகளந்த போது, அவரது பாதம் விண்ணை நோக்கிச் சென்றது; அது, பிரம்மாவின் பார்வையில் பட்டது. காணற்கரிய காட்சி தேடி வருகிறதே என்று மகிழ்ச்சியடைந்த பிரம்மா, அந்தப் பாதங்களை புனிதநீரால் அபிஷேகம் செய்தார். அந்த நீர் அருவி போல் பூமியிலுள்ள அழகர் மலையில் (மதுரை) விழுந்து ஆறாய் ஓடியது. அதற்கு, “நூபுர கங்கை’ என பெயர் வைத்தனர். “நூபுரம்’ என்றால், “சிலம்பு!’ “சிலம்பணிந்த திருப்பாதங்களை அபிஷேகம் செய்ததால் ஏற்பட்ட ஆறு…’ என்று இதற்கு பொருள் கொள்ள வேண்டும். நூபுர கங்கையில் நீராடுவது பெரும் நன்மையைத் தரும்.
திருவோணத்தன்று, நம் இல்லங்களில் அழகான மலர்க்கோலம் இட வேண்டும். பல வகை பாயசம், உணவு தயாரித்து பெருமாளுக்கு நிவேதனம் செய்த பிறகு, குழந்தைகளோடு மகிழ்ச்சியுடன் சாப்பிட வேண்டும். எந்தச் செயலை செய்வதாக இருந்தாலும், பெருமாளின் திருவடிகளை மனதார நினைத்த பிறகு துவங்க வேண்டும். அனைவருக்கும் பெருமாளின் அருளாசி கிடைக்கட்டும்.