பலருக்கும், பல் மற்றும் ஈறுப் பகுதிகளில் பிரச்சினை இருக்கும். பொதுவாக ஒவ்வொருவரும் பயன்படுத்தும் பற்பசையே வாயில் ஏற்படும் பிரச்சினைகளுக்குக் காரணம். பற்பசை மற்றும் உண்ணும் உணவில் செய்யும் மாற்றங்கால் பெருமளவு பிரச்சினையைத் தீர்க்கலாம்.
வாகை மரப்பட்டையை நிழலில் உலர்த்தி பொடி செய்து பாலில் கலந்து குடித்து வர, பசியை உண்டாக்கும். வாய்ப்புண் குணமாகும்.
வாகை வேர்ப் பட்டையை பொடி செய்து, அதைக் கொண்டு பல் துலக்கி வர, பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். பல் உறுதியாகும்.
வாகை வேர்ப் பட்டையை நீர்விட்டுக் காய்ச்சி வெதுவெதுப்பாக இருக்கும் போது அதனைக் கொண்டு வாய்க் கொப்பளித்து வர, வாய்ப்புண், பல் ஈறு உறுதியாகும்.
வாகைப் பிசினை பொடி செய்து பால் அல்லது வெண்ணெயில் கலந்து உட்கொண்டு வர, அல்சர் எனப்படும் குடல் புண்ணைக் குணப்படுத்தும், குடல் புண் குணமானால் வாயில் புண் வருவது தவிர்க்கப்படும்.
மேலும் தகவலுக்கு இங்கு சுட்டவும்
thanks to webdunia
Monday, November 30, 2009
Friday, November 27, 2009
கடுகின் மருத்துவத் தன்மை
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது பழமொழி. இத்தகைய சிறப்பு மிக்க கடுகிற்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.
பொதுவாக நாம் கடுகை சமையலில் தாளிப்பதற்கு பயன்படுத்துகிறோம். அதாவது, நாம் சமைக்கும் சமையல் ஜீரணமாக அடிப்படையான கடுகை முதலில் போடுகிறோம். ஏன் என்றால் கடுகு ஜீரணத்திற்கு உதவுகிறது.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் கடுகு, மிளகு, உப்பு மூன்றையும் ஒரே அளவு சேர்த்து சாப்பிட்டுவிட்டு அதன்பிறகு வெந்நீர் குடிக்க வேண்டும். இப்படி செய்வதால் பித்தம், கபம் போன்றற்றால் ஏற்படும் உடல் உபாதைகள் நீங்கும்.
விஷம், பூச்சி மருந்து, தூக்க மாத்திரை போன்றவற்றை சாப்பிட்டவர்களுக்கும், 2 கிராம் கடுகை நீர்விட்டு அரைத்து நீரில் கலக்கி உட்கொள்ளக் கொடுத்தால் உடனடியாக வாந்தி எடுத்து விஷம் வெளியேறும்.
தேனில் கடுகை அரைத்து உட்கொள்ளக் கொடுக்க இருமல், கபம், ஆஸ்துமா குணமாகும்.
மேலும் தகவலுக்கு இங்கு சுட்டவும்
thanks to webdunia
பொதுவாக நாம் கடுகை சமையலில் தாளிப்பதற்கு பயன்படுத்துகிறோம். அதாவது, நாம் சமைக்கும் சமையல் ஜீரணமாக அடிப்படையான கடுகை முதலில் போடுகிறோம். ஏன் என்றால் கடுகு ஜீரணத்திற்கு உதவுகிறது.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் கடுகு, மிளகு, உப்பு மூன்றையும் ஒரே அளவு சேர்த்து சாப்பிட்டுவிட்டு அதன்பிறகு வெந்நீர் குடிக்க வேண்டும். இப்படி செய்வதால் பித்தம், கபம் போன்றற்றால் ஏற்படும் உடல் உபாதைகள் நீங்கும்.
விஷம், பூச்சி மருந்து, தூக்க மாத்திரை போன்றவற்றை சாப்பிட்டவர்களுக்கும், 2 கிராம் கடுகை நீர்விட்டு அரைத்து நீரில் கலக்கி உட்கொள்ளக் கொடுத்தால் உடனடியாக வாந்தி எடுத்து விஷம் வெளியேறும்.
தேனில் கடுகை அரைத்து உட்கொள்ளக் கொடுக்க இருமல், கபம், ஆஸ்துமா குணமாகும்.
மேலும் தகவலுக்கு இங்கு சுட்டவும்
thanks to webdunia
Thursday, November 26, 2009
முத்தத்தை அழகாக படம் பிடித்திருக்கிறார்கள் - பரத்
கண்டேன் காதலை, ஆறுமுகம் படங்களை முடித்துவிட்டு திருத்தணிக்காக முண்டாவை முறுக்கிக் கொண்டிருக்கிறார் பரத். பழனிக்குப் பிறகு பேரரசு இயக்கத்தில் பரத் நடிக்கும் படம். என்னை ஆக்சன் ஹீரோவாக உயர்த்திய படம் பழனி என்று கூறுகிறவர், திருத்தணி அந்த இமேஜை உச்சத்துக்கு கொண்டு செல்லும் என்று நம்புகிறார்.
நீங்களும் சின்ன தளபதி பட்டமெல்லாம் போட்டு ரேஸில் குதித்திருக்கிறீர்களே?
சின்ன தளபதிங்கிறது நானா போட்டுகிட்ட பட்டம் கிடையாது. எம்டன் மகன் படத்தில் நடித்த போது ரசிகர்கள் அளித்த பட்டம். அவர்களின் அன்பு வேண்டுகோளுக்காக பழனி படத்திலிருந்து அந்த பட்டத்தை பயன்படுத்துறேன்.
பழனியில் குஷ்பு, ஆறுமுகத்தில் ரம்யா கிருஷ்ணன். சீனியர் நடிகைகளுடன் நடிப்பது எப்படியிருக்கிறது?
ரொம்ப சந்தோஷமாக இருக்கு. சீனியர்களுடன் நடிக்க முடியலையேங்கிற ஏக்கம் பல பேருக்கு இருக்கு. ஆனா, எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது உண்மையிலேயே நல்ல அனுபவமாக இருக்கிறது. நடிகைகளுடன் மட்டுமில்லை. தம்பிக்கு இந்த ஊரு படத்தில் பிரபு சாருடனும், திருத்தணியில் ராஜ்கிரண் சாருடனும் நடிக்கிறேன்.
கண்டேன் காதலை படத்தில் தமன்னாவுக்கு முத்தம் கொடுத்திருக்கிறீர்களாமே?
கதைக்கு தேவையாக இருந்ததால் அப்படியொரு காட்சியை இயக்குனர் எடுத்தார். முத்தம்னாலும் அதுவும் நடிப்புதானே? ரொம்ப அழகா அந்த முத்தத்தை படமாக்கியிருக்காங்க.
WD
தம்பிக்கு இந்த ஊரு படத்தில் உஙக் டான்ஸ் பிரமாதமாக இருப்பதாக சொல்கிறார்களே?
என்னுடைய நடனம் பேசப்பட முக்கிய காரணம் ஸ்விங்கர்ஸ் நடனக்குழுவும் மாஸ்டர் பிரசன்னகுமாரும்தான். இப்போதும் நேரம் கிடைக்கிற போது டான்ஸ் பயிற்சி எடுத்துப்பேன். தம்பிக்கு இந்த ஊரு படத்தில் புது மாதிரியான டான்ஸை முயற்சி பண்ணியிருக்கேன். கண்டிப்பா பேசப்படுற மாதிரி அது இருக்கும்.
ரொமாண்டிக் ஹீரோ மாதிரி இருக்கும் நீங்கள் பத்து பேரை ஒத்தையா அடிக்கிற ஆக்சன் ஹீரோவாக நடிப்பது எப்படி?
பத்து பேரை அடிக்கிறோம்னா அது நம்புகிற மாதிரி இருக்கணும். பைட்ல ஒரு வேகம் இருக்கணும். முக்கியமா அதுக்கேற்ற உடம்பு வேணும். ஆதனால உடம்பை கவனிக்கும் விஷயத்தில் உறுதியா இருப்பேன்.
ரஜினி, கமல் படங்களில் அப்பாஸ் நடிச்சிருக்கார். உன்னைப்போல் ஒருவனில் கணேஷ் ராகவேந்திரா நடிச்சிருக்கிறார். இதுமாதிரி பெரிய நடிகர்களின் படங்களில் வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா?
கதையும், கேரக்டரும் நன்றாக இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன்.
இப்போதைய இளம் தலைமுறையில் போட்டி பொறாமை இல்லை. உங்களின் படங்களைப் பார்த்து சக நடிகர்கள் கருத்து சொல்வது உண்டா?
இப்போ நடிக்கிற யங் ஹீரோஸ் எல்லாருமே எனக்கு ப்ரெண்ட்ஸ்தான். படத்தை பார்த்துட்டு ஓபனா கருத்து சொல்வாங்க. பழனி படத்தை பார்த்துட்டு, ரொம்ப நல்லா பண்ற. கமர்ஷியல் உனக்கு பிரமாதமா வருதுன்னு ஃபோன் செய்து விஜய் பாராட்டினார்.
படைப்புகளை பார்வையிட இங்கு சுட்டவும்
thanks to webdunia.
Free Collections
நீங்களும் சின்ன தளபதி பட்டமெல்லாம் போட்டு ரேஸில் குதித்திருக்கிறீர்களே?
சின்ன தளபதிங்கிறது நானா போட்டுகிட்ட பட்டம் கிடையாது. எம்டன் மகன் படத்தில் நடித்த போது ரசிகர்கள் அளித்த பட்டம். அவர்களின் அன்பு வேண்டுகோளுக்காக பழனி படத்திலிருந்து அந்த பட்டத்தை பயன்படுத்துறேன்.
பழனியில் குஷ்பு, ஆறுமுகத்தில் ரம்யா கிருஷ்ணன். சீனியர் நடிகைகளுடன் நடிப்பது எப்படியிருக்கிறது?
ரொம்ப சந்தோஷமாக இருக்கு. சீனியர்களுடன் நடிக்க முடியலையேங்கிற ஏக்கம் பல பேருக்கு இருக்கு. ஆனா, எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது உண்மையிலேயே நல்ல அனுபவமாக இருக்கிறது. நடிகைகளுடன் மட்டுமில்லை. தம்பிக்கு இந்த ஊரு படத்தில் பிரபு சாருடனும், திருத்தணியில் ராஜ்கிரண் சாருடனும் நடிக்கிறேன்.
கண்டேன் காதலை படத்தில் தமன்னாவுக்கு முத்தம் கொடுத்திருக்கிறீர்களாமே?
கதைக்கு தேவையாக இருந்ததால் அப்படியொரு காட்சியை இயக்குனர் எடுத்தார். முத்தம்னாலும் அதுவும் நடிப்புதானே? ரொம்ப அழகா அந்த முத்தத்தை படமாக்கியிருக்காங்க.
WD
தம்பிக்கு இந்த ஊரு படத்தில் உஙக் டான்ஸ் பிரமாதமாக இருப்பதாக சொல்கிறார்களே?
என்னுடைய நடனம் பேசப்பட முக்கிய காரணம் ஸ்விங்கர்ஸ் நடனக்குழுவும் மாஸ்டர் பிரசன்னகுமாரும்தான். இப்போதும் நேரம் கிடைக்கிற போது டான்ஸ் பயிற்சி எடுத்துப்பேன். தம்பிக்கு இந்த ஊரு படத்தில் புது மாதிரியான டான்ஸை முயற்சி பண்ணியிருக்கேன். கண்டிப்பா பேசப்படுற மாதிரி அது இருக்கும்.
ரொமாண்டிக் ஹீரோ மாதிரி இருக்கும் நீங்கள் பத்து பேரை ஒத்தையா அடிக்கிற ஆக்சன் ஹீரோவாக நடிப்பது எப்படி?
பத்து பேரை அடிக்கிறோம்னா அது நம்புகிற மாதிரி இருக்கணும். பைட்ல ஒரு வேகம் இருக்கணும். முக்கியமா அதுக்கேற்ற உடம்பு வேணும். ஆதனால உடம்பை கவனிக்கும் விஷயத்தில் உறுதியா இருப்பேன்.
ரஜினி, கமல் படங்களில் அப்பாஸ் நடிச்சிருக்கார். உன்னைப்போல் ஒருவனில் கணேஷ் ராகவேந்திரா நடிச்சிருக்கிறார். இதுமாதிரி பெரிய நடிகர்களின் படங்களில் வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா?
கதையும், கேரக்டரும் நன்றாக இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன்.
இப்போதைய இளம் தலைமுறையில் போட்டி பொறாமை இல்லை. உங்களின் படங்களைப் பார்த்து சக நடிகர்கள் கருத்து சொல்வது உண்டா?
இப்போ நடிக்கிற யங் ஹீரோஸ் எல்லாருமே எனக்கு ப்ரெண்ட்ஸ்தான். படத்தை பார்த்துட்டு ஓபனா கருத்து சொல்வாங்க. பழனி படத்தை பார்த்துட்டு, ரொம்ப நல்லா பண்ற. கமர்ஷியல் உனக்கு பிரமாதமா வருதுன்னு ஃபோன் செய்து விஜய் பாராட்டினார்.
படைப்புகளை பார்வையிட இங்கு சுட்டவும்
thanks to webdunia.
Free Collections
Tuesday, November 24, 2009
முகப்பரு மறைய மிளகு வைத்தியம்
முகப்பருவிற்கு பெண்கள் எத்தனையோ வைத்தியம் செய்தும் பலனில்லாமல், வடுக்கள் முகம் முழுவதும் இருந்து கொண்டே இருக்கும்.
இதனைப் போக்க மிளகை வைத்து கை வைத்தியம் செய்யலாம்.
அதாவது, மிளகு, சந்தனம், ஜாதிக்காய் ஆகியவற்றை நன்கு அரைத்து முகப்பருவின் மீது பூசி வர வேண்டும்.
முகப்பரு மீது பூசி அப்படியே காய விட்டு, அது உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் முகம் கழுவி வர வேண்டும்.
இப்படியே செய்து வந்தால் பெண்களுக்கு வரும் முகப்பரு மறையும். மேலும், ஏற்கனவே இருக்கும் முகப்பரு வடுக்கள் நாளடைவில் மறைந்து காணாமல் போகும்.
இதனை கண்களில் படாமல் வைக்க வேண்டியது மிகவும் அவசியம்.
படைப்புகளை பார்வையிட இங்கு சுட்டவும்
இதனைப் போக்க மிளகை வைத்து கை வைத்தியம் செய்யலாம்.
அதாவது, மிளகு, சந்தனம், ஜாதிக்காய் ஆகியவற்றை நன்கு அரைத்து முகப்பருவின் மீது பூசி வர வேண்டும்.
முகப்பரு மீது பூசி அப்படியே காய விட்டு, அது உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் முகம் கழுவி வர வேண்டும்.
இப்படியே செய்து வந்தால் பெண்களுக்கு வரும் முகப்பரு மறையும். மேலும், ஏற்கனவே இருக்கும் முகப்பரு வடுக்கள் நாளடைவில் மறைந்து காணாமல் போகும்.
இதனை கண்களில் படாமல் வைக்க வேண்டியது மிகவும் அவசியம்.
படைப்புகளை பார்வையிட இங்கு சுட்டவும்
Monday, November 23, 2009
கண்ணீரே ஒரு கிருமிநாசினி
பொதுவாக உடலில் காயம் பட்டக் குழந்தைகள் அழுவதால், அவர்களது காயம் விரைவில் ஆறும் என்று கூறினால் நம்புவீர்களா?
ஆம், நிச்சயமாக, அழாத குழந்தைகளை விட, அழும் குழந்தைகளின் காயம் விரைவில் ஆறுவது அறிவியல் உண்மைதான். இதற்குக் காரணமாக அமைவது கண்ணீரில் உள்ள கிருமி நாசினி.
மனிதர்களின் கண்ணீரில் ஒரே ஒரு துளியை எடுத்து 6 ஆயிரம் துளி தண்ணீருடன் கலந்தால் கூட அந்த கலப்பு நீர் நூற்றுக்கணக்கான நோய்க்கிருமிகளைக் கொல்லும் சக்தி கொண்ட கிருமி நாசினியாகவே இருக்கும்.
லைனோசம் என்ற ஒரு வகை ரசாயனம் மனிதர்களின் கண்ணீரில் ஏராளமாய் இருக்கிறது. இதுவே கிருமி நாசினியாக செயல்படுகிறது.
இனி காயம் பட்ட குழந்தைகள் அழுதால் அதற்காக அவர்களைத் திட்ட வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதற்காக அழச் சொல்லி கட்டாயப்படுத்தாதீர்கள்.
படைப்புகளை பார்வையிட இங்கு சுட்டவும்
Thanks to Webdunia
Free Gifts World
ஆம், நிச்சயமாக, அழாத குழந்தைகளை விட, அழும் குழந்தைகளின் காயம் விரைவில் ஆறுவது அறிவியல் உண்மைதான். இதற்குக் காரணமாக அமைவது கண்ணீரில் உள்ள கிருமி நாசினி.
மனிதர்களின் கண்ணீரில் ஒரே ஒரு துளியை எடுத்து 6 ஆயிரம் துளி தண்ணீருடன் கலந்தால் கூட அந்த கலப்பு நீர் நூற்றுக்கணக்கான நோய்க்கிருமிகளைக் கொல்லும் சக்தி கொண்ட கிருமி நாசினியாகவே இருக்கும்.
லைனோசம் என்ற ஒரு வகை ரசாயனம் மனிதர்களின் கண்ணீரில் ஏராளமாய் இருக்கிறது. இதுவே கிருமி நாசினியாக செயல்படுகிறது.
இனி காயம் பட்ட குழந்தைகள் அழுதால் அதற்காக அவர்களைத் திட்ட வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதற்காக அழச் சொல்லி கட்டாயப்படுத்தாதீர்கள்.
படைப்புகளை பார்வையிட இங்கு சுட்டவும்
Thanks to Webdunia
Free Gifts World
Thursday, November 19, 2009
மாரடைப்பு ஏற்படக் காரணம்
மாரடைப்பால் மரணம் என்று சொல்லிக் கேள்விப் பட்டுள்ளோம். ஆனால் இந்த மாரடைப்பு என்றால் என்ன என்று தெரியுமா?
இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய் (தமனி) அடைபடுவதால், இதயத்தின் ஒரு பகுதிக்கு ரத்தம் செல்வது தடைபட்டு, அந்த பகுதி செயலிழந்து போகிறது. இதைத்தான் மாரடைப்பு என்று கூறுகிறார்கள்.
ரத்த ஓட்டத் தடை என்பது பெரும்பாலும் ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்தால் வருகிறது. உடலில் அதிகமான கொழுப்பு சேரும் போது ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது.
மாரடைப்பு ஏற்பட மேலும் பல காரணங்கள் உள்ளன. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், புகை பிடித்தல், மன உளைச்சல், உடல் பருமன், அதிக உடல் உழைப்பின்றி இருப்பது போன்றவையும் மாரடைப்பு ஏற்படக் காரணங்களாகின்றன.
மாரடைப்பு ஏற்பட மேற்கூறிய காரணங்கள் இருந்தாலும், பரம்பரை பரம்பரையாகவும் இந்த நோய் தாக்க வாய்ப்புள்ளது. எனவே, நமது முன்னோர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருந்தால், நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
படைப்புகளை பார்வையிட இங்கு சுட்டவும்
Thanks to webdunia
இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய் (தமனி) அடைபடுவதால், இதயத்தின் ஒரு பகுதிக்கு ரத்தம் செல்வது தடைபட்டு, அந்த பகுதி செயலிழந்து போகிறது. இதைத்தான் மாரடைப்பு என்று கூறுகிறார்கள்.
ரத்த ஓட்டத் தடை என்பது பெரும்பாலும் ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்தால் வருகிறது. உடலில் அதிகமான கொழுப்பு சேரும் போது ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது.
மாரடைப்பு ஏற்பட மேலும் பல காரணங்கள் உள்ளன. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், புகை பிடித்தல், மன உளைச்சல், உடல் பருமன், அதிக உடல் உழைப்பின்றி இருப்பது போன்றவையும் மாரடைப்பு ஏற்படக் காரணங்களாகின்றன.
மாரடைப்பு ஏற்பட மேற்கூறிய காரணங்கள் இருந்தாலும், பரம்பரை பரம்பரையாகவும் இந்த நோய் தாக்க வாய்ப்புள்ளது. எனவே, நமது முன்னோர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருந்தால், நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
படைப்புகளை பார்வையிட இங்கு சுட்டவும்
Thanks to webdunia
Wednesday, November 18, 2009
மழைக்காலப் பராமரிப்பு
மழைக்காலத்தில் எளிதாக நோய் தாக்கும் அபாயம் இருக்கும். எனவே வெளியில் செல்லும் போது காலணி அணியாமல் செல்வதைத் தவிர்க்கவும்.
வெளியில் சென்று வந்ததும் மறக்காமல் சுத்தமான நீரைக் கொண்டு காலைக் கழுவிவிட்டு, உலர்ந்த துணியால் காலைக் கழுவவும்.
குடிநீரை கொதிக்க வைத்து வடிகட்டிக் குடிக்கப் பயன்படுத்தவும். கழிவு நீர் கலந்துள்ள பகுதிகளில் நடப்பதை தவிர்க்கவும்.
சுகாதாரமாக தயாரிக்கப்பட்ட உணவுப் பண்டங்களை சாப்பிடவும். அசைவ உணவுகளை அதிகம
படைப்புகளை பார்வையிட இங்கு சுட்டவும்
thanks to webdunia
வெளியில் சென்று வந்ததும் மறக்காமல் சுத்தமான நீரைக் கொண்டு காலைக் கழுவிவிட்டு, உலர்ந்த துணியால் காலைக் கழுவவும்.
குடிநீரை கொதிக்க வைத்து வடிகட்டிக் குடிக்கப் பயன்படுத்தவும். கழிவு நீர் கலந்துள்ள பகுதிகளில் நடப்பதை தவிர்க்கவும்.
சுகாதாரமாக தயாரிக்கப்பட்ட உணவுப் பண்டங்களை சாப்பிடவும். அசைவ உணவுகளை அதிகம
படைப்புகளை பார்வையிட இங்கு சுட்டவும்
thanks to webdunia
Tuesday, November 17, 2009
உடல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள்
பால்வினை நோய்கள் உடல் உறவின் மூலம் தான் மிகமுக்கியமாக வருகின்றன. வைரஸ், பாக்டீரியா, ஒட்டுண்ணிகள் ஆகியவையே இவற்றிற்குக் காரணமாகும். இவ்வகையில் குறைந்தபட்சம் 25 வேறுபட்ட பால்வினை நோய்கள் உள்ளன. இவை எல்லாமே 5 விதமான அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றன.
பிறப்புறுப்புப் புண்
இந்த வகைப் புண்கள் ஒன்றோ பலவோ இருக்கும். இவை வலியுடனோ வலி இல்லாமலோ இருக்கும். இவை சாதாரணக் கட்டியாகவோ நீருடன் கூடிய சிறு சிறு கொப்புளங்களாகவோ காணப்படும். இவை ஆண், பெண் இருவருக்கும் வரும்.
பிறப்புறுப்பிலிருந்து வெளிவரும் அசாதாரணப்போக்கும்
ஒரு மனிதனின் சிறுநீர் துவாரத்தின் வழி சீழ் வெளிப்படுமானால் அது நிச்சயமாகப் பால்வினை நோயின் அறிகுறியாகும். இது அடிக்கடி சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலுடனோ வலியுடனோ வெளிப்படும். பெண்களுக்குத் துர்நாற்றத்தோடு ஒழுக்கு வெளிப்பட்டு துணிகள் கறைபடியுமானால் அது பால்வினை நோயின் அறிகுறியாகும்.
கவட்டியில் நெறிகட்டுதல்
ஆண், பெண் இருபாலருக்கும் கவட்டியில் அதாவது இடுப்பும் காலும் இணையும் பகுதியில் நெறிகட்டுதல். இது மிகவும் வலியினை ஏற்படுத்தும்.
விதைப்பை வீக்கம்
ஆண்களுக்கு விதைப்பை வீக்கமும் வலியும் பால் வினை நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
அடிவயிற்றில் தொடர்ச்சியான வலி
பெண்களுக்கு தொடர்ச்சியான அடிவயிற்று வலி பால்வினை நோயாக இருக்கலாம். உடலுறவின் போது எப்போதும் மிகுந்த வலி ஏற்படுமானால் அது நிச்சயமாகப் பால்வினை நோயின் அறிகுறியே ஆகும்.
இதில் ஒரு சில அறிகுறிகள் வெறும் தொற்றுக் கிருமிகளாலும் ஏற்படலாம். ஆனால் எதுவாக இருந்தாலும் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்வது மிகவும் முக்கியம்.
படைப்புகளை பார்வையிட இங்கு சுட்டவும்
thanks to webdunia
பிறப்புறுப்புப் புண்
இந்த வகைப் புண்கள் ஒன்றோ பலவோ இருக்கும். இவை வலியுடனோ வலி இல்லாமலோ இருக்கும். இவை சாதாரணக் கட்டியாகவோ நீருடன் கூடிய சிறு சிறு கொப்புளங்களாகவோ காணப்படும். இவை ஆண், பெண் இருவருக்கும் வரும்.
பிறப்புறுப்பிலிருந்து வெளிவரும் அசாதாரணப்போக்கும்
ஒரு மனிதனின் சிறுநீர் துவாரத்தின் வழி சீழ் வெளிப்படுமானால் அது நிச்சயமாகப் பால்வினை நோயின் அறிகுறியாகும். இது அடிக்கடி சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலுடனோ வலியுடனோ வெளிப்படும். பெண்களுக்குத் துர்நாற்றத்தோடு ஒழுக்கு வெளிப்பட்டு துணிகள் கறைபடியுமானால் அது பால்வினை நோயின் அறிகுறியாகும்.
கவட்டியில் நெறிகட்டுதல்
ஆண், பெண் இருபாலருக்கும் கவட்டியில் அதாவது இடுப்பும் காலும் இணையும் பகுதியில் நெறிகட்டுதல். இது மிகவும் வலியினை ஏற்படுத்தும்.
விதைப்பை வீக்கம்
ஆண்களுக்கு விதைப்பை வீக்கமும் வலியும் பால் வினை நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
அடிவயிற்றில் தொடர்ச்சியான வலி
பெண்களுக்கு தொடர்ச்சியான அடிவயிற்று வலி பால்வினை நோயாக இருக்கலாம். உடலுறவின் போது எப்போதும் மிகுந்த வலி ஏற்படுமானால் அது நிச்சயமாகப் பால்வினை நோயின் அறிகுறியே ஆகும்.
இதில் ஒரு சில அறிகுறிகள் வெறும் தொற்றுக் கிருமிகளாலும் ஏற்படலாம். ஆனால் எதுவாக இருந்தாலும் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்வது மிகவும் முக்கியம்.
படைப்புகளை பார்வையிட இங்கு சுட்டவும்
thanks to webdunia
Monday, November 16, 2009
சின்ன சின்ன குறிப்புகள்
அவரைப் பிஞ்சை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வர, ரத்த அழுத்தம் விரைவாக குறையும்.
தேங்காய் பாலுடன் தேன் கலந்து குடிக்க, வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண் ஆறும்.
மணத்தக்காளி கீரையை அடிக்கடி சாப்பிட்டு வர வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.
பாகற்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வர, வயிற்றில் உள்ள பூச்சிகள் அழியும்.
மஞ்சள், அருகம்புல் மற்றும் சுண்ணாம்பு கலந்து நகச்சுற்று ஏற்பட்டிருக்கும் விரலில் கட்ட நகச்சுற்று குணமாகும். அல்லது கொழுந்து வெற் றிலையுடன் சுண் ணாம்பு சேர்த்தும் கட்டலாம்.
வேப்பம் பூவை உலர்த்தி, தூள் செய்து, வெந்நீரில் கலந்து உட்கொள்ள, வாயுத் தொல்லை நீங்கும். வேப்ப எண்ணெயை காய்ச்சி,சேற்றுப்புண் உள்ள இடங்களில் தடவ குணம் கிடைக்கும்.
படைப்புகளை பார்வையிட இங்கு சுட்டவும்
Thanks to webdunia
தேங்காய் பாலுடன் தேன் கலந்து குடிக்க, வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண் ஆறும்.
மணத்தக்காளி கீரையை அடிக்கடி சாப்பிட்டு வர வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.
பாகற்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வர, வயிற்றில் உள்ள பூச்சிகள் அழியும்.
மஞ்சள், அருகம்புல் மற்றும் சுண்ணாம்பு கலந்து நகச்சுற்று ஏற்பட்டிருக்கும் விரலில் கட்ட நகச்சுற்று குணமாகும். அல்லது கொழுந்து வெற் றிலையுடன் சுண் ணாம்பு சேர்த்தும் கட்டலாம்.
வேப்பம் பூவை உலர்த்தி, தூள் செய்து, வெந்நீரில் கலந்து உட்கொள்ள, வாயுத் தொல்லை நீங்கும். வேப்ப எண்ணெயை காய்ச்சி,சேற்றுப்புண் உள்ள இடங்களில் தடவ குணம் கிடைக்கும்.
படைப்புகளை பார்வையிட இங்கு சுட்டவும்
Thanks to webdunia
Saturday, November 14, 2009
உயிரைக் காப்பாற்றிய தொலைபேசி அழைப்பு
செல்பேசியில் பேசியபடியே தண்டவாளத்தை அல்லது சாலையைக் கடந்து சென்றவர்கள் பலர் விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கின்றனர்.
ஆனால் இங்கே ஒரு மூதாட்டி செல்பேசி அழைப்பினால் உயிர் பிழைத்திருக்கிறார் என்றால் அது ஆச்சரியமான விஷயம்தானே.
லண்டனில் வாழ்ந்து வரும் சூ எல்லிஸ் என்ற முதாட்டி, சற்று ஓய்வு நேரத்தில் ஒரு சோபாவில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் வீட்டின் தொலைபேசி ஒலிக்க, அதை எடுக்க எழுந்துச் சென்று போனை எடுத்திருக்கிறார்.
போனை எடுத்து பேசுவதற்குள், வீடே அதிரும்படி ஒரு சப்தம் எழுந்தது. என்னவென்று பார்க்க, வீட்டின் சுவரை இடித்துக் கொண்டு ஒரு கார் உள்ளே வந்து சோபாவையும் நசுக்கிவிட்டிருந்தது.
பக்கத்து வீட்டுக்காரர், தனது காரை ரிவர்ஸ் எடுக்க முயற்சித்து, கூடுதலாக ஆக்சிலேட்டரை அழுத்திவிட, பிறகென்ன.. சோபாவிற்குள் தஞ்சம் புகுந்துள்ளது கார்.
வீடே இடிந்தாலும், நூலிழையில் உயிர் தப்பியதை நினைத்து இன்ப அதிர்ச்சியில் உறைந்தார் சூ எல்லிஸ். பிறகு என்ன.. தன்னை தொலைபேசியில் அழைத்து உயிரைக் காப்பாற்றிய தனது சகோதரிக்கு நன்றி மழையாகப் பொழிந்துள்ளார்.
இதுதான் தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்ற பழமொழியின் பொருளோ.
மேலும் பல சுவையான தகவல்களுக்கு இங்கு சுட்டவும்
Thanks to Webdunia
ஆனால் இங்கே ஒரு மூதாட்டி செல்பேசி அழைப்பினால் உயிர் பிழைத்திருக்கிறார் என்றால் அது ஆச்சரியமான விஷயம்தானே.
லண்டனில் வாழ்ந்து வரும் சூ எல்லிஸ் என்ற முதாட்டி, சற்று ஓய்வு நேரத்தில் ஒரு சோபாவில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் வீட்டின் தொலைபேசி ஒலிக்க, அதை எடுக்க எழுந்துச் சென்று போனை எடுத்திருக்கிறார்.
போனை எடுத்து பேசுவதற்குள், வீடே அதிரும்படி ஒரு சப்தம் எழுந்தது. என்னவென்று பார்க்க, வீட்டின் சுவரை இடித்துக் கொண்டு ஒரு கார் உள்ளே வந்து சோபாவையும் நசுக்கிவிட்டிருந்தது.
பக்கத்து வீட்டுக்காரர், தனது காரை ரிவர்ஸ் எடுக்க முயற்சித்து, கூடுதலாக ஆக்சிலேட்டரை அழுத்திவிட, பிறகென்ன.. சோபாவிற்குள் தஞ்சம் புகுந்துள்ளது கார்.
வீடே இடிந்தாலும், நூலிழையில் உயிர் தப்பியதை நினைத்து இன்ப அதிர்ச்சியில் உறைந்தார் சூ எல்லிஸ். பிறகு என்ன.. தன்னை தொலைபேசியில் அழைத்து உயிரைக் காப்பாற்றிய தனது சகோதரிக்கு நன்றி மழையாகப் பொழிந்துள்ளார்.
இதுதான் தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்ற பழமொழியின் பொருளோ.
மேலும் பல சுவையான தகவல்களுக்கு இங்கு சுட்டவும்
Thanks to Webdunia
Friday, November 13, 2009
நல்ல நண்பர்கள்
படித்ததில் பிடித்தது
மனைவி - ஏங்க உங்க பிரண்டுக்கு பார்திருக்குற பொண்ணு நல்லாவேயில்லையே... நீங்களாவது சொல்லக் கூடாதா?
கணவன் - நான் ஏன் சொல்லணும்.
மனைவி - நீங்க அவர் பிரண்டுதானே
கணவன் - அவன் மட்டும் எனக்கு சொன்னானா என்ன?
மேலும் பல சுவையான தகவல்களுக்கு இங்கு சுட்டவும்
நன்றி வெப்துனியா தமிழ்
மனைவி - ஏங்க உங்க பிரண்டுக்கு பார்திருக்குற பொண்ணு நல்லாவேயில்லையே... நீங்களாவது சொல்லக் கூடாதா?
கணவன் - நான் ஏன் சொல்லணும்.
மனைவி - நீங்க அவர் பிரண்டுதானே
கணவன் - அவன் மட்டும் எனக்கு சொன்னானா என்ன?
மேலும் பல சுவையான தகவல்களுக்கு இங்கு சுட்டவும்
நன்றி வெப்துனியா தமிழ்
சிரிப்பு கதை - முத்தம்!
கணவன் மனைவிக்கு கடிதம் எழுதுகிறான்,
என் அருமை மனைவிக்கு
உன் அன்பு கணவன் எழுதும் மடல்
இங்கு நான் நல்ல சுகம், அதுபோல்
உன் சுகம் அறிய ஆவல், பணம் அனுப்ப முடியாத காரணத்தால் இந்த கடிதத்துடன் பணத்திற்கு பதில் 100 முத்தங்கள் அனுப்பி உள்ளேன் பெற்றுக்கொள்ளவும்,
கடிதம் கிடைத்த பிறகு மனைவி கணவனுக்கு கடிதம் எழுதிகிறாள்,
அன்புள்ள !
மேலும் படிக்க இங்கு சுட்டவும்
என் அருமை மனைவிக்கு
உன் அன்பு கணவன் எழுதும் மடல்
இங்கு நான் நல்ல சுகம், அதுபோல்
உன் சுகம் அறிய ஆவல், பணம் அனுப்ப முடியாத காரணத்தால் இந்த கடிதத்துடன் பணத்திற்கு பதில் 100 முத்தங்கள் அனுப்பி உள்ளேன் பெற்றுக்கொள்ளவும்,
கடிதம் கிடைத்த பிறகு மனைவி கணவனுக்கு கடிதம் எழுதிகிறாள்,
அன்புள்ள !
மேலும் படிக்க இங்கு சுட்டவும்
Thursday, November 12, 2009
தூய தமிழ் காப்பும் தொடர்புடைய உண்மைகளும்
மொழி ஒரு கருத்துப் பரிமாற்றக் கருவி எனக்கூறுவது முழுமையாகக் கூறப்படாத ஒரு விளக்கமாகும். மொழி, அதைப் பேசுகின்ற இனத்தின் அரசியல், கலை, வரலாறு, குமுகநிலை, பழக்கவழக்கம், ஒழுக்க நெறிகள் மற்றும் எண்ணங்கள் போன்ற பல வாழ்வியல் கூறுகளையும் பண்பாட்டு நிலைகளையும் வெளிப்படை விளக்கமாகவும் உள்முகச் செய்திகளாகவும் கொண்டிலங்குகிறது. எல்லாரும் புரிந்து கொள்ளக் கூடியவாறு இக்கருத்தைச் சான் கிரகாம் தம் நூலில் (English word-book) விளக்கிக் கூறுகிறார்.
தமிழ்மொழி உலக முதன்மொழி என்றும் முதற்றாய்மொழி என்றும் கூறும் தேவநேயப் பாவாணர் போலும் அறிஞர்களின் கருத்துக்களை ஏற்கத் தயங்குவோர் இருக்கலாம். ஆனால், தமிழின் தொன்மையையும் தனித்தன்மையையும் மொழியறிஞர்களாகிய கால்டுவெல், இராபர்ட்டு நொமிலி, எல்லிசு, வீரமாமுனிவர், போப், சியார்ச்சு காட்டு போன்ற பலரும் ஐயத்திற்கிடமின்றி ஒப்புகின்றனர். அவர்களின் நடுவுநிலை மதிப்பீடுகள், தமிழ் தனித்தியங்கவல்ல செம்மொழி என்னும் கருத்தை வலியுறுத்துகின்றன.
மேலும் படிக்க இங்கு சுட்டவும்
தமிழ்மொழி உலக முதன்மொழி என்றும் முதற்றாய்மொழி என்றும் கூறும் தேவநேயப் பாவாணர் போலும் அறிஞர்களின் கருத்துக்களை ஏற்கத் தயங்குவோர் இருக்கலாம். ஆனால், தமிழின் தொன்மையையும் தனித்தன்மையையும் மொழியறிஞர்களாகிய கால்டுவெல், இராபர்ட்டு நொமிலி, எல்லிசு, வீரமாமுனிவர், போப், சியார்ச்சு காட்டு போன்ற பலரும் ஐயத்திற்கிடமின்றி ஒப்புகின்றனர். அவர்களின் நடுவுநிலை மதிப்பீடுகள், தமிழ் தனித்தியங்கவல்ல செம்மொழி என்னும் கருத்தை வலியுறுத்துகின்றன.
மேலும் படிக்க இங்கு சுட்டவும்
Wednesday, November 11, 2009
தலைவலி வருவது எதனால்
பலருக்கும் காலம் காலமாக தலைவலிப் பிரச்சினை இருக்கும். ஆனால் அவர்களோ எளிதாக வலி நிவாரண மாத்திரை ஒன்றை வாங்கி போட்டுக் கொண்டு காலத்தை ஓட்டிக் கொண்டிருப்பார்கள்.
ஆனால் உலகத்தில் பலருக்கும் தலைவலி என்ற ஒரு வியாதி நிச்சயம் வந்திருக்கும். ஒவ்வொரு தலைவலிக்கும் பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.
மாணவர்களுக்கு சில சமயங்களில் அதிகமான தலைவலி வரும். அதற்குக் அவர்களது கண் கோளாறு காரணமாக இருக்கும். கண் கோளாறு காரணமாக தலைவலி வந்தால் கண்ணாடி போட்டுக் கொள்ளலாம்.
கண் நீர் அழுத்த நோய் இருந்தால் காலையில் தூங்கி எழுந்தவுடன் தலைவலி வரும். சாதாரணமாக கண் மூடி உட்கார்ந்தாலோ அல்லது இருட்டில் உட்கார்ந்தாலோ தலைவலி வரும் நபர்களும் உண்டு.
ரத்த அழுத்தம் அதிகரித்தல் அல்லது பல் சொத்தை, சைனஸ் பிரச்சினை ஆகிய காரணங்களாலும் தலைவலி வரும்.
எந்த காரணத்திற்காக தலைவலி வருகிறது என்பதை அறிந்து அதற்குண்டான மருந்துகளை உட்கொள்வதுதான் ஆரோக்கிய வாழ்விற்கு வகை செய்யும்.
thanks to webdunia
மேலும் படிக்க இங்கு சுட்டவும்
ஆனால் உலகத்தில் பலருக்கும் தலைவலி என்ற ஒரு வியாதி நிச்சயம் வந்திருக்கும். ஒவ்வொரு தலைவலிக்கும் பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.
மாணவர்களுக்கு சில சமயங்களில் அதிகமான தலைவலி வரும். அதற்குக் அவர்களது கண் கோளாறு காரணமாக இருக்கும். கண் கோளாறு காரணமாக தலைவலி வந்தால் கண்ணாடி போட்டுக் கொள்ளலாம்.
கண் நீர் அழுத்த நோய் இருந்தால் காலையில் தூங்கி எழுந்தவுடன் தலைவலி வரும். சாதாரணமாக கண் மூடி உட்கார்ந்தாலோ அல்லது இருட்டில் உட்கார்ந்தாலோ தலைவலி வரும் நபர்களும் உண்டு.
ரத்த அழுத்தம் அதிகரித்தல் அல்லது பல் சொத்தை, சைனஸ் பிரச்சினை ஆகிய காரணங்களாலும் தலைவலி வரும்.
எந்த காரணத்திற்காக தலைவலி வருகிறது என்பதை அறிந்து அதற்குண்டான மருந்துகளை உட்கொள்வதுதான் ஆரோக்கிய வாழ்விற்கு வகை செய்யும்.
thanks to webdunia
மேலும் படிக்க இங்கு சுட்டவும்
இப்படியும் சில பழமொழிகள்
* எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும்
* ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானே வரும்
* ஒரு பொய்க்கு ஒரு மூட்டை பொய் பாலம்
* ஓடும் குதிரை ஓட்டத்தில் தெரியும்
* கார் ஓட டயரும் தேயும்
* சிகரெட் விரலளவு சீக்கு உடலளவு
* சைக்களுக்குத் தெரியுமா பெட்ரோல் வாசனை
* தான் ஓடாவிட்டாலும் தம் கடிகாரம் ஓடும்
* தீக்குச்சி தன் தலைக்கனத்தால் கெடும்
மேலும் படிக்க இங்கு சுட்டவும்
* ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானே வரும்
* ஒரு பொய்க்கு ஒரு மூட்டை பொய் பாலம்
* ஓடும் குதிரை ஓட்டத்தில் தெரியும்
* கார் ஓட டயரும் தேயும்
* சிகரெட் விரலளவு சீக்கு உடலளவு
* சைக்களுக்குத் தெரியுமா பெட்ரோல் வாசனை
* தான் ஓடாவிட்டாலும் தம் கடிகாரம் ஓடும்
* தீக்குச்சி தன் தலைக்கனத்தால் கெடும்
மேலும் படிக்க இங்கு சுட்டவும்
நகைச்சுவை
ஒருவன்: உன் வீட்டுக்குத் திருடன் வந்தப்போ நீ ஏன் உன் துப்பாக்கியை உபயோகப்படுத்தலை?
மற்றவன்: அதை அவன் கண்ணிலே படாம ஒளிச்சு வச்சுட்டேனே.
மேலும் நகைச்சுவைகள் படிக்க இங்கு சுட்டவும்
மற்றவன்: அதை அவன் கண்ணிலே படாம ஒளிச்சு வச்சுட்டேனே.
மேலும் நகைச்சுவைகள் படிக்க இங்கு சுட்டவும்
Subscribe to:
Posts (Atom)