Thursday, September 21, 2006

சிக்கனத்திற்கு சில வழிகள்

ரயிலேறப்போன கணவன் வீட்டுக்குத் திரும்பி வந்தான் வீட்டுக்குள் இருந்த மனைவி கதவைத் திறக்காமலே "என்ன விஷயம்" எனக் கேட்டாள்

"ரிசர்வேஷன் டிக்கெட்டை வீட்டில் மறந்து வச்சுட்டு போயிட்டேன். அதனை எடுக்க வந்தேன்" என்றார்

"கதவை அடிக்கடி பூட்டித் திறந்தால் கதவு தேய்ந்து விடும். எனவே ஜன்னல் வழியாக டிக்கெட்டைத் தருகிறேன் வாங்கிக்கொள்ளுங்கள்" என்றாள் மனைவி

டிக்கட்டை ஜன்னல் வழியாகக் கொடுத்தாள். கணவன் பெற்றுக்கொண்டு திரும்பி நடந்தான்.

"என்னங்க..." என்றாள்
"ம்...." என்றான்

இப்படி அடிக்கடி நடந்தால் செருப்பி தேய்ந்துவிடும். செருப்பை எடுத்து பைக்குள் போட்டுவிட்டு நடந்து போங்கள்" என்றாள் மனைவி

எப்படி இருக்கு.................

எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பது முக்கியமல்ல. சிக்கனம் பண்ணி எவ்வளவு சேமிக்கிறோம் என்பது தான் முக்கியம்.

ஒன்றரை ரூபாய் ஜாங்கிரியில் பாதி மீதி வைத்தால் முக்கால் ரூபாய் வீணாகிறது.

சிக்கனம் என்பதைக் காட்ட முடியாத இடங்களும் உண்டு. 14 முழச் சேலை உடுத்தும் மனைவியை "சிக்கனம்" என நினைத்து 4 முழச் சேலை உடுத்தச் சொல்வது நல்லதா ?

நல்ல படுக்கை விரிப்புகள், நல்ல தலையணை இவற்றை நாம் அன்றாடம் வாங்கவில்லை. எப்போதாவது வாங்குகிறோம். இதில் சிக்கனம் பார்க்க வேண்டிய அவசியமில்லை.

சிறுகக்கட்டி பெருக வாழ் என்பது பழமொழி

how to get success in life click here

Friday, September 15, 2006

வயதானவர்கள் வாழ்க கதை பகுதி 1

வயதானவர்கள் வாழ்க பகுதி 1 (படித்ததில் பிடித்தது நகைச் சுவைத் தென்றல் பொ. ம. ராசமணி)

ஒரு பாரசீக மன்னன் தனது பரிவாரங்களோடு இளைஞர்களை அழைத்துக் கொண்டு இஸ்தான்பூரில் இருந்து கப்பர்நாகூம் பட்டிணத்திற்கு புறப்பட்டான். மொத்தம் ஏழு நாள் பயணம்.

பாரசீக மன்னனின் தாத்தா உடலை புதைத்த இடம் தான் கப்பர்நகூம். தாத்தா இறந்த நூறாவது நாள் நினைவு சடங்கு அங்கு நடத்த வேண்டும். பாலைவனப் பகுதி என்பதால் "இளைஞர்கள் மட்டுமே அந்தப் பயணத்தில் பங்கு பெற வேண்டும்" என மன்னன் கண்டிப்பாக கூறிவிட்டான்.

பயணம் ஆரம்பமானது. முதல்நாள் முடிவதற்குள் பயங்கர பாலைவனப்புயல். புயலில் ஓட்டபங்கள் திசை மாறின. மன்னனும் சிலரும் வழிமாறி விட்டனர். வழி மாறிய பின் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஒட்டகங்களில் கொண்டு வந்த தண்ணீர் காலியாகி விட்டது. தாகத்திற்கு தண்ணீர் இல்லை.

தண்ணீர் தாகத்தால் சிலர் துவண்டனர். சிலர் இறந்தனர். பாரசீக மன்னன் திண்டாடினான். ஆனால் இரு நாட்கள் கூட தண்ணீர் இல்லாமல் தாக்கு பிடிக்க முடியவில்லை.

மன்னன் படும் கஷ்டத்தைப் பார்த்து, "மன்னா....... தண்ணீர் இருக்கும் இடத்தை நான் சொல்கிறேன். இங்கிருந்து தென்கிழக்காக இரண்டு மைல் தூரம் சென்றால் தண்ணீர் கிடைக்கும்" என்றான் வயதில் குறைந்த இளைஞன்

அவன் பேச்சை நம்பி அவன் குறிப்பிட்ட தூரம் நடந்து வந்தனர். என்ன ஆச்சரியம் அங்கு தண்ணீர் தடாகம் இருந்தது.

"உனக்கு எப்படித் தெரியும்?" என்று மன்னர் கேட்டார்

அவன் என்ன சொன்னான் தெரியுமா கதை பகுதி 2-ல் அடுத்தநாள் படியுங்கள்

இனிய கதைகள் நகைச்சுவை துணுக்குகளுக்கு

Saturday, September 02, 2006

welcome to TAMIL PARK

Tamil Parks with Tamil Jokes, Tamil Articles, Tamil History, Tamil Resources are updated and started a forum also u can share you school life and computer life and share the computer or software problems and solve the problems also

Click here for the FORUM