Friday, July 28, 2006

ஆன்லைனில் பாதுகாப்பான பணபரிமாற்றத்திற்கு சில ஆலோசனைகள்

பண பரிமாற்றத்திற்காக பல மணி நேரம் காத்திருந்த நிலை மாறி தகவல் தொழில்நுட்பத்தின் உதவியால் இணைய வழியில் விரைவாகவும் எளிதாகவும் வங்கி கணக்கை கையாளுதல் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இருந்தும் நாம் செய்யும் சிறு தவறுகள் பெரிய இழப்புகளை ஏற்படுத்தி விடுகின்றன. இவற்றை தவிர்த்து இணைய வழியில் வங்கி கணக்குகளைக் சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் கையாள சில குறிப்புகளைக் காண்போம்.

இணைய வழியில் கணக்குகளை கையாள்பவர்களுக்காக வங்கிகள் பல கொள்கைகளையும் குறிப்புகளையும் தங்கள் இணைய தளங்களில் பதிப்பித்திருக்கிறார்கள். இவற்றை நாம் படிக்க தவறி விடுகிறோம். இவற்றை கட்டாயம் படிக்க வேண்டும். எந்தவகையான பாதுகாப்பு நடவடிக்கைகளை வங்கிகள் மேற்கொண்டு வருகின்றன என்பன போன்ற தகவல்களை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

முக்கியமாக இணைய வழியில் கணக்குகளை கையாளும் போது பாதுகாப்பு குறியீட்டு சொல்லை (Password) மிக கவனத்துடன் தேர்ந்தெடுக்க வேண்டும். பிறரால் ஊகிக்க முடியாத வகையில் எண்ணும் எழுத்தும் கலந்து இவற்றை உருவாக்குவது மிக அவசியம். இப்படி உருவாக்கிய சொற்களை காகிதங்களில் எழுதி வைப்பதை தவிர்த்து விடுங்கள். அதே போல கணக்கு விபரங்களை காகிதங்களில் எழுதி வைப்பதையும் தவிர்த்தல் நல்லது. இதனால் நம் கணக்கில் உள்ள பணத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

வங்கி கணக்கில் பணம் இல்லாத போது பல நண்பர்கள் தங்களுக்குள் வேடிக்கையாக வங்கி விபரங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். அதுவே ஆபத்தாக சில வேளைகளில் முடிந்து விடுவதும் உண்டு. எனவே பொது இடங்களில் வங்கி விபரங்களை யாரிடமும் தெரிவித்தல் நல்லதல்ல. கணிணிகளில் ஆண்டி-வைர°, பயர்வால் மற்றும் ஆண்டி-°பைவேர் போன்றவற்றை நிறுவி கணிணி தகவல்கள் திருட்டு போகாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.

தனிப்பட்ட முறையில் கணிணிகளை உபயோகித்தாலும் கூட செய்திகளை மறைமுகமாக சேமித்து வைக்கும் வசதிகளை (Cookies) ஏற்றுக் கொள்ளக் கூடாது. கூடிய வரையில் உங்கள் கணக்கை குறைந்தபட்சம் 15 நாட்களுக்கொரு முறையேனும் சரி பார்த்து வருவது நல்லது. இதனால் அனுமதி பெறாதவர்களின் நுழைவு இருக்கிறதா என்பதை அறியலாம்.

இணைய வழியில் வங்கி கணக்குகளை கையாளும் போது அவசரமோ பதற்றமோ இல்லாத மனநிலையில் இருங்கள். அதேபோல பல இணைய பக்கங்களை திறந்து வைத்திருப்பதையும் தவிர்த்து விடுங்கள். ஏனெனில் இவற்றால் வங்கி கணக்குரிய தகவல் திரையை மூடாமல் மறந்து இருந்து விட வாய்ப்புள்ளது.

நீங்கள் இணைய மையங்களில் வங்கி கணக்குகளை கையாளும் போது உங்கள் அருகிலோ அல்லது பின்புறமோ யாரும் இல்லாதபடி கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் பின்புறத்திலோ அல்லது பக்கவாட்டிலோ கண்ணாடிகள் இருந்தால் கூட அவ்விடங்களில் வங்கி கணக்குகளை கையாள்வதை தவிர்த்து விடுவது நல்லது.

நம் சேமிப்பை பாதுகாக்க நம் முயற்சிகள் தானே கை கொடுக்கும்! சில சிறிய பயிற்சிகள் பல பெரிய இழப்புகளை தவிர்க்க உதவும் என்பதால் விழிப்புடன் இருப்போம்! சேமிப்பை காப்போம்!

Tuesday, July 25, 2006

ஆபாச தளங்களில் இருந்து சிறுவரை காக்க புதிய யோசனை

ஆபாச இணைய தளங்களை சிறுவர்கள் பார்க்கா வண்ணம் தடுக்க ஒரு புதிய யோசனை வடிவம் பெற்று வருகிறது. அதாவது .com, .net, .org என்று இருப்பது போல .xxx என்ற களப்பெயரினை உருவாக்க ப்ளோரிடாவில் இருந்து ஒருவர் விண்ணப்பத்திருப்பதை அடுத்து இணையதளங்கள் பெயரிடலுக்கான சர்வதேச அதிகாரபூர்வ அமைப்பான CANN இந்த விஷயத்தை ஆலோசித்து வருகிறது.

அதாவது ஆபாச தளங்களை உருவாக்குவோர் தங்கள் தளங்களின் பெயர் விரிவை .xxx என்று அமைத்து கொள்ளும் பட்சத்தில் தங்கள் குழந்தைகள் இந்த இணைய தளங்களை பார்வையிடுவதை மென்பொருள் மூலமாக பெற்றோர்கள் தடுக்க முடியும்.

இருப்பினும் இது தளங்களுக்கு பெயரிட விரும்புவோரே முடிவு செய்யக் கூடிய விஷயமாகும். அதாவது .xxx என்ற கள விரிவுடன் இருக்கும் இணையதளங்களில் ஆபாசம் இருக்கும் என்று சொல்ல முடியுமே தவிர அந்த விரிவு இல்லாத தளங்களில் ஆபாசமே இருக்காது என்ற உத்தரவாதத்தினை நம்மால் கொடுக்க முடியாது. எனினும் இந்த யோசனை ஆபாச இணைய தளங்களில் இருந்து சிறுவரை காப்பாற்ற வேண்டும் என்று குரல் கொடுக்கும் ஏராளமான பெற்றோர்களுக்கு ஒரு சரியான திசையிலான நம்பிக்கையூட்டும் செய்தியாகும்.

Monday, July 17, 2006

நெஞ்சம் மறக்குமோ?

http://newworld.50webs.com

பிழாவில் உடன் கள்ளு,
கிடாய்ப் பங்கு, நுங்கு,
ஆடிக்கூழ், கீரிமலை,
பாபநாச யாத்திரைகள்,
தோடியில் சீக்காய்,
நள்ளிரவு முழு நிலவு,
வேலி எல்லாம் குளை நிரம்பி
பூவரசில் மசுக்குட்டி,
சோலிதான்,
ஆனாலும் முட்கிழுவை
இலை தேச்சு
சுடு சாம்பல் போட்டு
இழுக்கையில் தோல் மீது
தடிச்சுக் கடிச்சாலும்,
சோறியேக்கை
தோன்றுகின்ற
சுகமான அனுபவங்கள்.

பின்னேரம் யாழ்தேவி
பிடிச்சால்
மறுநாளே அந்நேரம்
கொழும்பால்
மீண்டூர் வருகின்ற
என்ன ஓர் வாழ்க்கை!

இன்னும் எத்தனையோ,
எத்தனையோ,
இழந்தாலும்,
'நெஞ்சால்
இழக்கேலா ஞாபகங்கள்"
எல்லாம் போயிப்ப
இருண்ட பெருவெளி ஆகி
சல்லடையாய்
நம் தேசம்
சபித்தது போல்....
இப்ப.....
வஞ்சகம் அறியாத
எஞ்சிய பனை மரங்கள்
வட்டிழந்து, வடிவழிந்து
எம்மைப் போல் நிற்கிறது.
உடைந்து சிதறி
அத்திவாரம் மேல்வந்து
குடைந்த பெருங்குழியாய்
வீடுகள் கிடக்கிறது.
அடிக்கடி அலறல்கள்
அனுதாப முணுமுணுப்பு.

துடித்திறந்தும் உரிமை
கேட்கேலா சில உடல்கள்,

இனம் புரியா ஓர் அமைதி
நாளுக்கு நாள் வேறுபடும்.
சனம் பழகி, இதனைச்
சட்டை செய்யாதொதுங்கும்,
ஊரின் நிம்மதியோ
நிசப்தம் போற் பொருளில்லை,
ஆனால்
'வேரின் பக்கமென
விழுதான தியாகங்கள்
இன்றும் உரமாக
இருப்பறிந்த நிலையாலே
என்னைப் போலவே
உணர் வோடு.....

'திருக்குமரன் கவிதைகள்' தொகுப்பிலிருந்து

Friday, July 14, 2006

ஜிடேனை புகழுகிறார் மாட்டராஸி

ஜிடேனுக்கு தங்க பந்து விருதுக்கு தேர்வு செய்தது சரியே என மாட்டராஸி சொலுகிறார்

Thursday, July 13, 2006

வெற்றி தோல்விகளுக்கு மனமே காரணம்.

நான் தொல்விகளை வெற்றிகளாக மாற்றுவது எப்படி? என்பது பற்றி கூற வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தது ஆனால் என்ன செய்வது? நேரம் கிடைக்கவில்லை, ஆகவே நான் இதில் தோல்வி அடைந்துவிடுவோமோ என் மனதில் நினைத்தேன்........ஆனாலும் மனதில் ஒரு வெறி இருந்தது. எப்படியாவது.......... இதை வலையில் வெளியிட வேண்டும் என்று. அது இன்று தான் வெற்றி பெற்றது.

உலக வாழ்க்கையில் ஒவ்வொரு படியிலும், எதையாவது புதிதாகக் கற்றுக்கொண்டுதான் இருக்கின்றோம். "கல்வி கரையில" என்று இதனாலேதான் பெரியோர்கள் கூறுகின்றனர்.

சிறுவயதில் பிறந்த வீட்டிலேயுள்ள பெற்றோரிடமும், அங்கேயுள்ள குடும்பத்தாரிடமும் பல செய்திகளை கற்றுக் கோள்கின்றோம். அதன் பின்னர் பள்ளிக்கூடங்களில் சென்று ஒரு பொதுக்கல்வியைப் பெறுகின்றோம். இதன் பின்னர் ஏதாவது ஒரு தொழிலுக்கான சிறப்புக் கல்வியையும் பயிற்சியையும் பெறுகின்றோம். இதனைத் தொடர்ந்து குடும்ப வாழ்வு சமூக வாழ்வு, என பல வகையான அறிவுகளை பெறுகின்றோம்.

உலகில் ஒவ்வொருவரும் இந்த முயற்சிகளிலே ஈடுபடுவதனால், ஒருவருக்கொருவர் போட்டிகள் இயல்பாகின்றன. இதனால் வெற்றி தோல்விகளும் இயற்கையாகின்றன.

உலக வாழ்வில் வெற்றி பெற வேண்டும். இந்த நோக்கத்தில் மன உறுதி வேண்டும். இதற்கேற்றப்படி நடந்து கொள்ளவும் முயல வேண்டும். இதைச் சிதைக்கும் அல்லது தடுக்கும் வேறு நோக்கங்களுக்கு முதன்மை தருகின்வர்கள் உலகை சார்ந்த வாழ்வில் வெற்றி பெற முடியாது. வாழ்வின் வெற்றிக்கான செல்வத்தின் பெருக்கத்தையோ, அல்லது ஆதரவான துணை வசதிகலையோ பெற முடியாது.

தாங்கள் உயர்வாகப் போற்றி மதிக்கும் நோக்கங்களையும், பண்புகளையும், கோட்பாதுகளையும் நடைமுரை உலக வாழ்விலேயும் கடைப்பிடிக்க முயல்பவர்கள் பெறும்பாலும் உலகில் தோல்வியையே சந்திப்பார்கள். இவைகளையும் உலகப் போக்கோடு இணைத்துக் கொண்டு உலகத்தோடு, ஒட்டி வாழ்வதிலே கருத்துச் செலுத்தினால், இவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாகும்.

தோல்வியை மறந்துவிடுங்கள்.

தொல்வியைப் பற்றி நினைத்து, வேதனைப்பட்டுப் புலம்புகிறதை அடியோடு மறந்து விட வேண்டும். இனி எப்படி வெற்றி பெறுவது என்பதைப் பற்றிச் சிந்திக்கப் பழ வேண்டும்.

"மாடிப் படியில் ஏறும் போது, மாடிக்குப் போய்ச் சேர்வதையே நினைத்துப் போக வேண்டும். கால் தவறி உருண்டு விழுந்தால் எந்த டாக்டரிடம் போவது என்பதை பற்றி ஏன் நினைக்க வேண்டும்.

Monday, July 10, 2006

தோல்வியைத் தவிர்ப்பதற்கு வழிகள்

அக்கறையோடு செய்யாத எந்தச் செயலும் வெற்றியைத் தருவதில்லை என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். எந்தச் செயலானாலும் அதில் பூரணமான அக்கறையோடு ஈடுபடும்போது அது வெற்றியையே தவறாமல் தரும்.

மனச் சோர்வுடனோ, உடலில் களைப்புடனோ, அக்கறையற்ற தன்மையுடனோ ஒன்றைச் செய்வதைவிடச் செய்யாமல் ஒத்திப் போதுவதே நல்லது.

தன்னை உணர்ந்து, தான் செய்யப் போகும் பணியை உணர்ந்து, செய்கின்ற காலத்தையும் இடத்தையும் சூழ்நிலையையும் பொருத்தமாகத் தேர்ந்து எதையும் செய்வதற்குத் தொடங்க வேண்டும். தொடங்கிய பின் ஒருமித்த மனத்துடன், வெற்றியில் முழு நம்பிக்கையுடனும் தொடர வேண்டும். இவ்வாறு செய்பவர்கள் முயற்சி சிறிதானாலும் பெரிதானாலும் வெற்றியையே காண்பார்கள். தோல்வியைக் காணவே மாட்டார்கள்.

மிகமிகச் சாதாரணமானவர்கள் கூட இந்த உறுதியான தன்மைக்ளால், உலகமே வியக்கும் பல காரியங்களைச் செய்திருக்கின்றார்கள். இவர்களுடைய மன உறுதியை அனைவரும் பெற முயல வேண்டும்.