Saturday, April 22, 2006

கலர் கலர் வாட் கலர்..........

சிவப்பு:

சந்தோசத்தின் அறிகுறி. இந்த கலரை விரும்பி அணிபவர்கள் புதுப்புது விசயங்களில் ஆர்வமா இருப்பார்களாம். எந்த விசயத்தையும் முதியாதுன்னு ஒதுக்கி வைக்காமல் சேலன்ஞ்சா எடுத்துட்டு முடிப்பாங்க. டேஞ்சர் மாதிரி இருக்குன்னு சொல்லி சிவப்பு நிறத்தை வெறுப்பவர்களுக்கு தன்னம்பிக்கை இருக்காது.



பச்சை:

வாழ்க்கையை அனுபவித்து வாழ்பவர் நீங்கள். எதையும் வெளிப்படையாக பேசுபவர். தன்னைப் பற்றி நினைத்து தானே பெருமைப்படுபவர். பச்சையை பிடிக்காதவர்கள் நம்மை யாருக்குமே பிடிக்காது என்று தாழ்வு மனப்பான்மையுடன் வாழ்பவர்கள். ஆனால் மற்றவர்கள் அப்படி நினைக்கிறார்களே என்று கவலைப்படமாட்டார்கள்.



நீலம்:

என்த விசயமாய் இருந்தாலும் நீங்களே முடிவு எடுப்பீர்கள். எந்த விசயத்துக்கும் உடனே அப்செட் ஆகமாட்டீர்கள். உண்மைக்கு புறம்பானவர்கள். நீலம் பிடிக்காதவர்களுக்கு சட்டென்று கோபம் வரும்.



இளம் பச்சை:


எதையும் தீர ஆராய்ந்து முடிவு எடுப்பவர். அடுத்தவர்கள் பார்த்து வியக்கும்படியான தோற்றம் உடையவர்கள் நீங்கள். இந்த நிரம் பிடிகாதவர்கள், எதிலும் விருப்பம் இல்லாமல் ஏனோதானோ என்ற போக்குடையவர்களாக இருப்பார்கள்.



ஆரஞ்ச்:

உங்களுக்கு என்று ஒரு குறிக்கோளை வைத்துக் கொண்டு அதை எட்டிபிடிக்கும் வரை விடமாட்டீர்கள். வருமானம், தகுதியை உயர்த்திக் கொள்ளவே விரும்புவீர்கள். அதற்காகவே அவர்கள் நேரத்தை செலவழிப்பீர்கள். இந்தக் கலரை விரும்பாதவர்களின் எண்ணங்கள் நேர்த்தியாக இருக்கும்.



ரோஸ்:

செல்லமாக வளர்பவர்கள். அதனால் அவர்களின் வாழ்க்கையில் கவனம் வேண்டும். தான் என்ற எண்ணத்துடனே எப்போதும் இருப்பார்கள். ரோஸ் பிடிக்காதவர்கள் அனாவசியமாக நேரத்தையோ, பணத்தையோ வீணாக செலவழிக்க மாட்டார்கள். நன்றாக பேசும் சுபாவம் உடையவர்கள். ஆனால் அவர்கள் பேச்சினால் பலன் இருக்காது.



ஊதா:

அமைதியான சுபாவம் உடையவர்கள். என்ன நினைக்கிறோம் என்பதை வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள். கஸ்டமான வேலைகளில் ஈடுபட மாட்டார்கள். ஊதா பிடிக்காதவர்கள் தன் சுய முயற்சியில் வெற்றி பெறுபவர்கள். தன்னைத் தானே ஆராய்ந்து கொண்டு தனக்கு எது ஒத்துவருமோ அதில் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள்.



சாம்பல் நிறம்:

மற்றவர்களைப் பற்றி எந்தக் கவலையும் கிடையாது. தான் நன்றாக இருந்தால் போதும். தனிமையை நாடுவர். இந்த நிறத்தை விரும்பாதவர்கள், ஒரு காரியம் நினைத்தால் அதில் வெற்றி பெற்ற பிறகு தான் உட்காருவார்கள்.



மஞ்சள்:

இயல்பை விட அதிகமாக யோசிப்பவர். மற்றவர்களுக்கு உதவி செய்பவர். இந்த நிறம் பிடிக்காதவர்கள், சந்தேக எண்ணம் கொண்டவர். அவர்களை யாராவது பாராட்டி கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்.



காப்பி கலர்:

நல்ல நண்பர், காதலன், யாராவது அவர்களை ஏமாற்றினால் அவர்களை மன்னிக்கவே மாட்டீர்கள். துரோகம் செய்பவர்களை அறவே பிடிக்காது. இந்த நிறம் பிடிக்காதவர், என்ன நினைக்கிறார்க்ளோ அதை வெளிப்படையாக சொல்பவர். சோர்வு இல்லாமல் உழைப்பார்கள்.



கருப்பு:


இவர்களின் எண்ண அலைகள் மாறி கோண்டே இருக்கும். அவர்கள் நினைத்து நடக்கவில்லையென்றால் பயங்கரமாக அப்செட் ஆவார்கள். கருப்பு பிடிக்காதவர்கள், விருப்பு, வெறுப்பு, கொண்ட சாதாரண மனிதனாக இருப்பார்.


இங்கே சுட்டி புதிய தகவல்களை பெருங்கள்

No comments: